tamilnadu

img

பறவைகள்... பட்டாசுகள்... மனிதர்கள்...பருவகாலப் பண்பாடு!

தீபாவளி என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டம் தொடங்கிவிடும், ஆங்காங்கே பட்டாசு ஒலிகளுடன். தீபாவளியை விமரிசை யாகவும், வித்தியாசமாகவும் கொண்டா டும் பெரும்பாலான கிராமங்களுக்கு மத்தியில், அதை கொண்டாடாமல் உள்ள கிராமங்களும் இருக்கின்றன.  அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் கொள்ளுக்குடிபட்டி கிராமம் தீபாவளிப் பண்டிகையை நாற்பது ஆண்டுகளாக தவிர்த்து வருகிறது.  இதற்குக் காரணம் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சர ணாலயம் தான். இது மதுரையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளி நாட்டிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் வருகை தருகின்றன. அந்தப் பறவைகள் அங்கு முட்டையிட்டு, அடை காத்து, குஞ்சு பொரித்து தன்னுடைய குஞ்சுப் பறவைகளுடன் தங்கள் நாடு களுக்கு மீண்டும் பறந்து செல்கின்றன.  அப்பறவைகளுக்கு ஏற்ற இதமான தட்பவெப்பம் நிலவுகின்ற பகுதி என்பதால், கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சின்னக்கொக்கு, உண்ணிக் கொக்கு, மடையான், சாம்பல் கொக்கு, செந்நீலக் கொக்கு, பனங்காடை, ஊதா தேன் சிட்டு, புள்ளி அலகு வாத்து, பட்டை தலை வாத்து, பாம்புதாரா, இரவு நாரை, கரண்டி வாயன், முக்குளிப்பான் என 217 வகையான 8 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் இங்கே வருகை தருகின்றன.

மழைக் காலங்களில் அடைகாத்த லுக்கு ஏற்ற சூழல் உள்ள பகுதி என்ப தால், பறவைகளின் வருகை ஆயிரக் கணக்கில் நிகழ்கிறது. இந்தப் பறவை களின் சரணாலயம் சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி, சின்ன கொள்ளுக்குடி ஆகிய ஊர் களின் நீர்நிலைகளில்தான் இந்தப் பற வைகள் அனைத்தும் அதன் வாழ்விட ங்களை அமைத்துள்ளன. கடந்த 1977-ஆம் ஆண்டு தமிழக அரசால் இந்தப் பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 40 ஆண்டுகளாக இந்த கிராமங்க ளின் மக்கள் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுவதைத் தவிர்த்து, கட்டுப் பாட்டைக் கடைபிடித்து வருகின்றனர்.  இது குறித்து கொள்ளுக்குடிபட்டியைச் சேர்ந்த செல்லமணி கூறுகையில்,   இங்குள்ள பொதுமக்கள் மட்டுமன்றி, குழந்தைகளும் தீபாவளிக்கு பட்டாசு கள் வெடிப்பதில்லை. ஊரை விட்டு வெளியே சென்று பட்டாசுகள் வெடிப்பார்க ளே தவிர்த்து ஊருக்குள் யாரும் பட்டாசு கள் வெடிப்பதில்லை.பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை, கடந்த 30  ஆண்டு காலமாக பின்பற்றி வருகின்ற னர். பட்டாசு வெடித்தால் பறவைகள் பதற்றமடைந்து விடும் என்பதற்காகவே இந்த சுய கட்டுப்பாடோடு இருக்கிறோம்.

இது பறவைகள் குஞ்சு பொரித்து இனப் பெருக்கம் செய்கிற காலம் என்பதால், அவற்றுக்கு தொந்தரவு தருகின்ற எந்த  செயல்பாடுகளுக்கும் இங்கு அனுமதி யில்லை. இந்த ஆண்டு தண்ணீர் குறைவாக உள்ளதால், பறவைகள் குறைவாகவே உள்ளன. மழை பெய்து விட்டால் மீண்டும் அவைகள் இங்கே வந்துவிடும் என்றார்.  சரோஜா என்பவர் கூறுகையில்,  புத்தாடை அணிதல், பலகாரம் சாப்பிடு தல் என தீபாவளியைக் கொண்டாடி னாலும், குழந்தைகள் முதற்கொண்டு யாரும் இங்கே பட்டாசுகள் வெடிப்ப தில்லை. இந்த ஊருக்கு திருமணம் செய்து வரும் பெண்கள், தங்களது ஊர் களுக்குச் சென்று தீபாவளி கொண்டாடி விட்டுதான் வருவார்கள். பறவைகளின் இனிமையான சத்தமே எங்களுக்கு திரு விழா போன்றது. தீபாவளிக்கு மட்டு மன்றி திருமணம், இறப்பு சடங்கு களில்கூட வெடிகளுக்கு இங்கு இடமில்லை  என்றார். குழந்தைகளான ஷர்மி, பிரணவ் ஆகியோர் கூறுகையில்,  எங்கள் ஊரில் தீபாவளி கொண்டாடுவோம். ஆனால் பட்டாசு மட்டும் வெடிப்பதில்லை. பறவை கள் குஞ்சு பொரிக்கின்ற காலம் என்ப தால், பறவைகளுக்கு அச்சம் தரும். ஆகையால் நாங்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை  என்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள செல்லப்பம்பாளையம், வடமுகம் வெள்ளோடு, செம்மாண்டம்பாளையம், கருக்கன்காட்டு வலசு, புங்கம்பாடி உள்ளிட்ட ஏழு கிராமங்களில் சுமார்  900-த்திற்கும் அதிகமான குடும்பத்தி னர் வசிக்கின்றனர்.  இவர்கள் தீபாவளி யன்றும் அதற்கு முன்பும் பின்பும்  பட்டாசுகள் வெடிப்பதில்லை. இதற்குக் காரணம் அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளைப் பாதுகாப்பதற்குத்தான் என்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகை யில், இந்த கிராமங்கள் அனைத்தும்  ஈரோட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் கி.மீ., தொலைவில் அமைந்துள்ளன. பொது வாக தீபாவளி அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தக் காலங்களில் வடமுகம், வெள் ளோடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங் களைச் சுற்றி பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆயிரக்கணக்கான உள்ளூர் பறவைகள், பிற பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்த பறவைகள் அக்டோபர், ஜனவரி மாதம் வரையில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக சரணாலயத்திற்கு வருகை தருகின்றன. பறவைகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 22 ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளியின் போது தங்கள் குழந்தை களுக்கு புதிய ஆடைகள் வாங்கித் தரு கிறோம், வெளிச்சம் தரும் பட்டாசு களையே பயன்படுத்துகிறோம்” என்ற னர். இந்தாண்டும் வழக்கமாக பட்டாசு  வெடிப்பதைத் தவிர்த்து விட்டோம். இத னால் சரணாலயத்தில் ஆயிரக்கணக் கான பறவைகள் பாதுகாப்பாகவும் ஆனந்தமாகவும் இருந்தன என்றனர்”.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிட்டம்பாளையத்தில் வசிப்பவர்கள்  கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீபா வளிக்கு பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் 4,380 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள ஆல மரம், புளிய மரங்களில் நிரந்தரமாக தங்கி யுள்ள 3,700 வவ்வால்களை பாது காப்பதற்காக அவர்கள் பட்டாசு வெடிப்ப தில்லை. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை மட்டும் வெடிப்பதை தவிர்க்கும் வகையில் பேசப்படாத உடன்படிக்கையாக இது தொடங்கப்பட்டாலும், 2006-ம் ஆண்டு முதல், எந்த விதமான பட்டாசுகளையும் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.  கே.தீபன் (12) கூறுகையில்: தீபாவளிக் கொண்டாட்டத்தில் இனிப்புகள் வழங்கு வது மற்றும் புதிய ஆடைகள் அணிவது  மட்டுமே எங்கள் கிராமத்தின் சிறப்பு. வெடி வெடித்தால் வௌவால்களுக்கு பாதிப்பு ஏற்படுமென்பதால் அதைச் செய்வதில்லை என்றார்”. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி யில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது. எஸ்.மாம்பட்டி கிராமம். இக்கிராம மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி கொண்டாடுவதில்லை என்கின்றனர். இது குறித்து கிராமத்தினர் சிலர் கூறுகையில் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் வேண்டும். ஏழை-பணக்காரர் வித்தியாசம் கூடாது. இல்லா தவர்கள்-இருப்பவர்கள் என்ற நிலை கூடாது. மக்கள் கஷ்டப்படக்கூடாது என்ப தற்காக தீபாவளி கொண்டாடுவதில்லை என்றனர்.

- ச.நல்லேந்திரன்