மதுரை, அக்.25- தீபாவளியன்று சேரும் குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி துய்மைப்பணியாளர் களின் பணிச்சுமையினை குறைக்கும் நோக்கில் மதுரை மாநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தீபாவளி மறுதினம் ‘மாஸ் கிளீனிங் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி வாலிபர் சங்கத்தி னர் தெற்குமாசி வீதி மற்றும் விளக்குத் தூண் ஆகிய பகுதிகளில் குவிந்த குப்பைகளை தீபாவளி மறுதினம் செவ்வாயன்று அகற்றும் பணியில் ஈடு பட்டனர். வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவரும் மதுரை மாநக ராட்சி துணை மேயருமான தி. நாக ராஜன், மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் டி.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் அ. பாவெல் சிந்தன், துணை நிர்வாகிகள் எஸ்.வேல்தேவா, நவீன், க. கௌதம் பாரதி, பிரசாந்த் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் போனி பேஸ், சரவணன், யாசர், ஆதி சிவன், ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.