வெம்பக்கோட்டை, ஏப்.16- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே நடைபெற்ற 2 ஆம் கட்ட அகழாய்வில் 200 தொன்மை யான பொருட்கள் கண்டெ டுக்கப்பட் டுள்ளன. வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜயகரி சல்குளம். இங்கு 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லி யல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்று கள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வெம்பக் கோட்டையில் முதல்கட்ட அகழாய்வுப் பணிகளுக்காக தமிழக அர சானது ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 16 அன்று அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த அகழாய்வுக்காக தோண் டப்பட்ட 15 குழிகளில், நுண் கற்காலம் முதல் இடைக்கற் காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கிடைத்தன. அதன்படி தங்க அணிகலன், சுடுமண்ணா லான முத்திரை, ஆண் உரு வம், சுடுமண்ணாலான சங்க கால முத்திரை, முழு சங்கு வளையல், இருபுறமும் உரு வம் பதித்த செப்பு நாணயம் உள்ளிட்ட மூவாயிரம் வகை யான பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண் டாம் கட்ட அகழாய்வுப் பணி யை கடந்த ஏப்ரல் 6 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அத னைத் தொடர்ந்து நடை பெற்று வந்த அகழ்வா ராய்ச்சியில் தற்போது வரை சுடுமண்ணால் ஆன புகை பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாண யங்கள், கண்ணாடி மணி கள், சுடுமண் காதணி உள் ளிட்ட 200 வகையான தொன் மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.