துருவ ஆய்வாளர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் கப்பலான எண்டூரன்ஸ், அண்டார்டிக்காவில் பனிப்புயலால் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடலில் சுமார் 10,000 அடி ஆழத்தில் (3,000 மீ) மூழ்கியது.
இந்த நிகழ்வு 1914-1917 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமான 1915-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடல்-பனிக்கட்டிகளில் அவரது கப்பல் சிக்கிக்கொண்டது,
தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டதாக அதைத்தேடி வந்த குழு வியாழனன்று கூறியது. 1915-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அண்டார்டிகாவை முதன்முதலில் கடக்க ஷேக்லெட்டன் எடுத்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், பாய்மரக் கப்பல் மாயமானது.
144 அடி நீளமுள்ள மரத்தாலான அந்தக் கப்லைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கப்பல் மூழ்கிய இடம் கப்பல் கேப்டன் ஃபிராங்க் வோர்ஸ்லியால் கண்டறியப்பட்டது, பனி மூடிய வெட்டெல் கடலின் நிலவிய பாதகமான சூழலால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இருப்பினும், எண்டூரன்ஸ் கப்பலை தேடும் பணி, ஃபாக்லாண்ட்ஸ் மரிடைம் ஹெரிடேஜ் அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டிஷ் துருவ ஆய்வாளர் ஜான் ஷியர்ஸ் தலைமையிலான குழுவினர் தென்னாப்பிரிக்காவில் பனிகளை உடைக்கும் கப்பலான அகுல்ஹாஸ்-II இலிருந்து இதற்கான பணியை மேற்கொண்டனர்.
மிக நுண்ணிய கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்ட சாபர்டூத்ஸ் எனப்படும் நீருக்கடியில் செல்லும் வாகனங்களைப் பயன்படுத்தி, கப்பலை தேடும் பணி நடைபெற்றது.
தேடுதலின் போது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் கப்பல் நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது, குறிப்பாக மாயமான கப்பலின் பெயர் பின்புறத்தில் தெளிவாகத் தெரிந்துள்ளது.
“எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மூழ்கிய கப்பலை கண்டுபிடித்துவிட்டோம்” என்கிறார் கப்பலை கண்டறியும் குழுவில் இடம் பெற்றிருந்த ஆய்வு இயக்குநர் மென்சன் பவுண்ட். மேலும் அவர் கூறுகையில் “நான் பார்த்ததில் மிகச்சிறந்த மரக்கப்பல் இது தான். விபத்திற்குப் பின்பும் கடலுக்கடியில் அப்படியே பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தது.
வோர்ஸ்லி பதிவு செய்த இடத்தில் இருந்து நான்கு மைல்கள் (ஆறு கிமீ) தொலைவில் “எண்டூரன்ஸ்” கண்டுபிடிக்கப்பட்டது கப்பல் மூழ்கிய இடம் என கப்பல் கேப்டன் ஃபிராங்க் வோர்ஸ்லியால் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து நான்கு மைல்கள் (ஆறு கிமீ) தொலைவில் “எண்டூரன்ஸ்” கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
மரக்கப்பல் மூழ்கி பனிக்கட்டியில் சிக்கித் தவித்த போதிலும், “எண்டூரன்ஸ்” இல் ஷேக்லெட்டன் உட்பட 28 பேர் கொண்ட குழுவினர் உயிர் தப்பினர்.
அவர்கள் மூன்று லைஃப் படகுகளில் பயணம் செய்து, மக்கள் வசிக்காத யானைத் தீவை அடைந்துள்ளனர், பின்னர்அங்கிருந்து லைஃப் படகில் சுமார் 800 மைல்கள் பயணித்து (1,300 கிமீ) தெற்கு ஜார்ஜியாவுக்குச் சென்றனர், அங்கு அவர்கள் ஒரு சிலர் உதவியுடன் கரை சேர்ந்துள்ளனர்.