கரிக்கால் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு
3 ஆண்டுகளாக வளர்ச்சி திட்ட பணிகள் பாதிப்பு
ராணிப்பேட்டை,ஜூன் 11– கரிக்கல் ஊராட்சி மன்றத்தில் தலைவர், துணைத் தலைவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தர முடியாத அவலம் நீடிக்கிறது. இந்நிலையில் கரிக்கல் காலனி பொதுமக்கள் செவ்வாயன்று (ஜூன் 10) ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சோளிங்கர் வட்டம், கரிக்கல் ஊராட்சி மன்றத்தில் தலைவர் கே. நிர்மலா, துணைத் தலைவர் என். லீலா இருவருக்கும் கருத்து வேறுபாடு காரண மாக தனித்தனியாக செயல் படுவதால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர், கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தர முடியவில்லை என மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். ஏரியில் தண்ணீர் இருந்தும் மதகு கால்வாய் தூர்வாரப்படாமல் விவ சாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. மக்கள் நல பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ள தாக கூறப்படுகிறது. மேலும் தலைவருக்கு வேண்டப் பட்ட பகுதிகளில் மட்டும் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வதாகவும், சில கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதால் இதுவரை சுமார் 6 ஊராட்சி செய லாளர்கள் பணி மாற்றப் பட்டுள்ளதாகவும், வெங்க டேசன் என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படு கிறது. கரிக்கல் காலனி பகுதியில் ஒரு முறை கூட கிராம சபா கூட்டம் நடத்த வில்லை. இதனால் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையுடன் ஊராட்சி மன்றம் செயல் படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.