சென்னை,மார்ச் 5- நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகளில் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் சிலர் போட்டியிட்டு வெற்றி பெற்ற விவகாரம் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை மிகுந்த உணர்ச்சிப் பூர்வமாகவும் முதிர்ச்சி நிறைந் ததாகவும் அமைந்திருந்தது. தேர்தலில் நடந்தேறிய குழப்பங்க ளின் விளைவாக ஆதங்கத்தை வெளிப்படுத்திய எமக்கு ஆழ்மனதை உலுக்குவதாகவும் உள்ளது. முதல்வரின் இத்தகைய போற்றுதலுக்குரிய தலை மைப் பண்பை பாராட்டுகிறோம்” என்றார்.
“திமுக தலைமை அறிவித் ததை மீறி தோழமைக் கட்சிக ளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலகிட வேண்டும்” என அறிவித்துள்ளார். இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உறுதி குலையா மல் காப்பாற்றியுள்ள முதலமைச் சருக்கு பாராட்டு தெரிவிக்கி றோம். திமுக தலைமையில் அமைந் துள்ள இந்தக் கூட்டணி தமிழ கத்தை காப்பாற்றும்; மாநில உரி மைகளை மீட்டுத்தரும்; சனாதன சக்திகளின் சதிகளை முறி யடிக்கும்; சமூகநீதியை உயர்த் திப் பிடிக்கும் என்ற மாபெரும் நம்பிக்கை மக்களிடையே உறுதி யாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். சமூகநீதி காக்கும் அளப் போர்க் களத்தில் திமுக முன்னெ டுக்கும் முயற்சிகளுக்கு முதல்வ ரோடு என்றென்றும் உடன் நிற்போம்; உற்றத் துணையிருப் போம் என்று உறுதியளிக்கிறோம். அத்துடன், வருங்காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைமை பொறுப்புகளை மக்களே நேரடியாகத் தேர்ந் தெடுக்கும் வகையில் சட்டமி யற்ற வேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் திருமாவளவன் கூறினார்.