மாமல்லபுரம்,ஜூலை 25- மாமல்லபுரத்தில் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி வருகிற 28 ஆம் தேதி தொடங்குகிறது. இதை யொட்டி தற்போது வெளி நாட்டு செஸ் வீரர்கள் சென்னை வரத்து வங்கி விட்டனர். இவர்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டல்களில் ஓய்வெடுத்து பயிற்சி யில் ஈடுபட்டு வருகிறார்கள். போலந்து, கஜகஸ்தான், உகாண்டா, கேமன்தீவு, கோஸ்டா ரிகா, புல்கர்யா, சர்பியா, எஸ்டோ னியா, ஐஸ்லாந்து, கோமோரோஸ் தீவு, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் சென்னை வந்துள்ளனர். வருகிற 28 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் தொடக்க விழாவில் வீரர்கள் அனைவரும் கலந்து கொள் கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பூஞ்சேரி ‘போர் பாய்ண்ட்ஸ்’ அரங்கத்தில் அமைக் கப்பட்டுள்ள இரண்டு விளையாட்டு அரங்கத்திற்கும் வீரர்களை அழைத்து வரும் பேருந்து வசதி, செல்லும் இடத்தை காட்டும் கருவி, குளிர் அளவு, முதலுதவி பெட்டி, ஆங்கிலம் பேசத்தெரிந்த ஓட்டுநர்கள் நியமனம், அதன் வேகம், பாதுகாப்பு, நிறுத்தும் இடம், இறங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை போக்குவரத்து உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு வரும் வீரர்களை தொடாமல் பரிசோதனை களை மேற்கொள்ள 20 டிஜிட்டல் ஸ்கேனர்கள் அங்கு அமைக்கப் பட்டு உள்ளன. இதனை வெடிகுண்டு பரிசோதனை போலீஸ் குழுவினர் அமைத்து வருகிறார்கள். மேலும் வெளிநாட்டு வீரர்களை அழைத்து வரும் பேருந்தை அரங்கத்தின் பரிசோ தனை நுழைவு வாயிலில் நிறுத்தி சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடை பெறும் இடம் முழுவதும் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.