மதுரை, ஜூலை 23- எல்ஐசி பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது என்று வளர்ச்சி அதி காரிகள் சங்க தென்மண்டல செயலாளர் ஆனந்த் வலியுறுத்தினார். தமிழ்நாடு, கேரளம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிர தேசத்தை உள்ளடக்கிய எல்ஐசி-யில் பணியாற்றும் சுமார் 2,500 வளர்ச்சி அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத் தும் 31-ஆவது வளர்ச்சி அதிகாரிகள், மண்டல மாநாடு மதுரையில் சனிக் கிழமை தொடங்கியது. ஞாயிறன்றும் மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது. மாநாட்டில் அகில இந்தியத் தலை வர் வினய்பாபு, செயலாளர் விவேக் சிங், மண்டலத் தலைவர் சிவக்குமார், மண்டலச் செயலாளர் ஆனந்த், மது ரைக் கோட்டத் தலைவர் அபத் மனோ கர் தேவஆசிர்வாதம், கோட்டச் செய லாளர் ஜோசப் சுரேஷ் ராஜ்குமார் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாநாட்டை வாழ்த்தி தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தெற்கு சட்டமன்ற உறுப் பினர் மு.பூமிநாதன், ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலை வர் சுரேஷ்குமார், லிகாய் (எல்ஐசி முக வர்கள்) சங்க நிர்வாகி மாரி, ஓய்வு பெற்ற ஊழியர் சங்க நிர்வாகி சந்திரசேகர பாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் பேசிய ஆயுள் காப் பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் சுரேஷ்குமார், ரூ.38 லட்சம் கோடி மதிப்பை கொண்டுள்ள எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருப்பவர்கள் வளர்ச்சி அதிகாரி கள் மற்றும் அவர்களைச் சார்ந்த முக வர்கள். எல்ஐசிக்கும்-மக்களுக்கும் மக்களுக்கும்-எல்ஐசி-க்கும் பாலமாக இருப்பவர்கள் வளர்ச்சி அதிகாரிகள்-முகவர்கள். இவர்களோடு இணைந்து எல்ஐசி ஊழியர்கள் பணியாற்றுகிறார் கள். எல்ஐசியின் செல்வ வளத்தை ஒன்றிய அரசு பல்வேறு கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்துகிறது. முதலில் எல்ஐசியின் 50 சதவீத பங்கு களை விற்க மோடி அரசு முடிவு செய் தது. ஒன்றுபட்ட போராட்டத்தால் அது 3.5 சதவீதமாக சுருங்கிவிட்டது. இதற்கு மேல் ஒரு சதவீதம் கூட தனியாருக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. சமூகப் பாதுகாப்பை உறுதி செய் யும் எல்ஐசி-யின் பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஏழை- எளிய மக்கள் செலுத்தும் பிரிமியத் திற்கு ஜிஎஸ்டி விதிப்பதை ரத்து செய்ய வேண்டுமென்றார்.
முகவர்கள் (லிகாய்) சங்க நிர்வாகி மாரி பேசுகையில், எல்ஐசி உருக்குப் போல் நிற்பதற்கு ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வளர்ச்சி அதிகாரி கள் சங்கம், முகவர்கள் சங்கம் ஆகி யவை தான் காரணம். தற்போது எல்ஐசி முகவர்களுக்கு வயது வரம்புடன் கூடிய முழுக் காப்பீடு உள்ளது. இதை வயது வரம்பை தளர்த்தி முகவர்களின் இறு திக்காலம் வரை முழுக் காப்பீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். வளர்ச்சி அதிகாரியொருவர் பேசு கையில், எல்ஐசி ஒருவரை பாலிசிதார ராக சேர்க்கும் முன் கண்ணை முழு மையாகக் திறந்து அனைத்து தகுதி களையும் ஆய்வு செய்து சேர்க்கிறது. அப்படிச் சேர்த்தவர்களுக்கு பாலிசி முதிர்வுத் தொகை உள்ளிட்ட பிற சேவைகளை கண்ணை மூடிக்கொண்டு வழங்குகிறது. ஆனால் தனியார் காப் பீட்டு நிறுவனங்கள் கண்ணை மூடிக் கொண்டு பாலிசிதாரரை சேர்க்கின்றன. பாலிசி முதிர்வு உள்ளிட்ட பிற சேவை களை வழங்கும்போது கண்ணைத் திறந்து கொண்டு பணத்தை செட்டில் செய்வதில் தாமதம் செய்கின்றன. தனி யார் என்பது பணத்தை திரும்பப்பெறும் போது தான் அறிய முடியுமென்றார். வளர்ச்சி அதிகாரிகள் சங்க தென் மண்டலச் செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது. எல்ஐசியின் வர்த்த கத்தை விரிவுபடுத்தும் வகையில் கிரா மங்கள் தோறும் முகவர்கள் உள்ளனர். தற்போது 2,500 வளர்ச்சி அதிகாரிகள் அவர்களைச் சார்ந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் முகவர்கள் உள்ளனர். வரும் காலங்களில் முகவர்களின் எண்ணிக் கையை இரண்டு லட்சமாக அதிகரித்து எல்ஐசி-யின் வருவாயைப் பெருக்கு வோம் என்றார்.