டெஹ்ரான், மார்ச் 16- இராக்கில் இயங்கி வந்த இஸ்ரேல் உளவுத்துறையின் முகாம் ஒன்று தகர்க்கப்பட்டதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் மேற்கு ஆசிய நாடுக ளில் தனது முகாம்களை அமைத்துள் ளது. அமெரிக்காவின் துணை நாடா கவே இஸ்ரேல் இப்பகுதியில் செயல் பட்டு வருகிறது. ஈரான், இராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுக ளுக்கு எதிரான தாக்குதல்களை இந்த உளவுத்துறை முகாம்கள் மூல மாக செயல்படுத்தி வருகிறார்கள். இராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரானின் ராணுவத் தளபதி கொல் லப்பட்டதற்கும் மொசாத்தின் தொடர்பு இருந்தது என்று ஈரான் குற்றம் சாட்டி வந்தது. ஈரானின் மேற்குப்பகுதியில் உள்ள ஆளில்லா விமான முகாம் ஒன்று தாக்கப்பட்டு சேதம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் இராக்கிலிருந்து முன்னெடுக்கப்பட்டது என்ற தகவ லின் அடிப்படையில் ஈரான் ராணுவம் ஆய்வு செய்து வந்தது.
இராக்கில் உள்ள இஸ்ரேலின் உளவு முகாம் கள்தான் இத்தகைய தாக்குதல்க ளுக்கு பின்புலத்தில் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்தகைய முகாம் ஒன்றின் மீது ஈரான் தாக்கு தல் நடத்தியுள்ளது. ஏவுகணைகள் மூலமாக இராக்கின் வடக்குப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இஸ்ரே லின் உளவுத்துறை முகாம் தாக்கப் பட்டது. இதில் 3 பேர் கொல்லப் பட்டனர். மேலும் 7 இஸ்ரேலிய உள வாளிகள் காயமடைந்தனர். 12 ஏவு கணைகளை வீசியதாக ஈரானின் ராணுவத்தரப்பிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் உளவுத் துறையின் மூத்த அதிகாரிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கி றார்கள். காயமடைந்தவர்களும் படு மோசமான நிலையில் உள்ளனர். காயமடைந்தவர்கள் அமெரிக்க விமானம் ஒன்றில் மூலம் சிகிச்சைக் காக அழைத்துச் செல்லப்பட்டி ருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் பற்றி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் நேரடியாக விமர்சனம் எதையும் வெளியிடவில்லை. தங்கள் தரப்பு பலவீனமானதாகக் கருதப்பட்டு விடும் என்றும், இஸ் ரேல் உளவு முகாம்கள் இராக் மண்ணில் இருப்பதை ஒப்புக் கொண்டது போலாகி விடும் என்றும் கருதியதால் அவர்கள் அமைதி காத்து வருகிறார்கள்.