திருவாரூர், ஜூலை 3- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் அன்னியூரில் உள்ளது பாகசாலை கிராமம். இக்கிராமம் ஆற்றின் ஒரு பக்கத்திலும் இவர்கள் பயன்படுத்தும் இடுகாடு ஆற்றின் மறு பக்கத்திலும் உள்ளது. பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் இடுகாட்டுக்கு செல்ல பாலம் வேண்டுமென்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வரு கின்றனர். ஆனால், மக்களுக்கு அவசிய மான இடங்களில் பாலம் அமைத்துத் தருவதை விட மணல் குவாரிக்கு வாய்ப்பாக உள்ள இடங்களில் மட்டுமே கடந்த ஆட்சியில் பாலம் அமைத்துத் தரப்பட்டதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சமீபத்தில் இறந்துபோன ஒருவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் ஆற்றைக் கடந்து இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. இறந்து போன உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் உயிரை பணயம் வைத்து ஆற்றைக் கடக்கும் இந்த நிலை மாற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.