சென்னை, பிப்.8- நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் பிப்.8 அன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது, ஆளு நரின் கடிதத்தை விளக்கி உரையாற்றிய பேரவைத் தலை வர் மு.அப்பாவு, “தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளு நர் திரும்பி அனுப்புள்ளார். உயர்மட்டக் குழுவின் அறிக்கை ஏற்புடையதாக இல்லை என ஆளுநர் குறிப் பிட்டுள்ளார். “காமாலைக் கண்ணால்”பார்ப்பவர்கள் போல் அந்த அறிக்கை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இயற்பி யல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு மட்டுமே தமி ழகம் முக்கியத்துவம் அளிப் பதாக ஆளுநர் கூறியுள்ளார். நீட் தேர்வு முறையானது என்ற வகையில் ஆளுநர் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார் எனக் கடிதத்தின் விவரங்களைப் முழுமையாக பட்டியலிட்டு அதன் தமிழாக்கத்தை வாசித்தார். கண்டனம் ஆளுநர் அறிக்கை நேரடியாக பேரவைத் தலைவர் என்ற முறையில், எனக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டது. என் தரப்பிலிருந்து அது பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டது. ஆனால், பேரவைக்கு ஆளுநர் மாளிகையிலி ருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை, பொதுவெளியில் வெளியிட்டு விவாதத்துக்கும் போராட்டத்துக்கும் வித்திட் டது ஏற்புடைய தாகுமா என்பதை இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டோர் யோசித்து பார்க்க வேண்டும் என்றும் பேரவைத் தலைவர் தெரி வித்தார். நீட் விலக்கு மசோ தாவை மீண்டும் நிறை வேற்றும் வகையில் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் கூடியுள்ளது. தனிப்பட்ட முறையில் ஆளுநரை விமர்சிக்காமல் சட்டப்பேர வையில் நீட் விலக்கு மசோ தாவைப் பற்றி மட்டும் உறுப் பினர்கள் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.