tamilnadu

img

கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் துணை முதல்வர் ஆய்வு

கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து  முனையத்தில் துணை முதல்வர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி, மே 25-  தமிழக முதல்வர், கடந்த மே 9 ஆம் தேதி திறந்து வைத்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகள், முதல் தளத்தில் நகரப் பேருந்துகள் வந்து செல்ல செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.  இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, கே.ஆர். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.