மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதா னந்தம் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கான வைப்புத்தொகை ரூ.50 ஆயிரத்தை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட இணைச் செயலாளர் சலீம் முஹம்மது மீரான், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.எஸ்.செண்பகத்திடம் வழங்கினார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், தென்காசி மாவட்டத் தலைவர் மாரியப்பன், சிஐடியு தென்காசி மாவட்டப் பொருளாளர் தர்மராஜ் , நெல்லை டிஎன் எஸ்டிசி ஓய்வூதியர் சங்க தலைவர் தாணுமூர்த்தி, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு செய லாளர் அருணாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.