நகை கடன், பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதில் நடைபெறும் குளறுபடிகளை போக்கிடக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாமக்கல்லை அடுத்த முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் சங்க துணைத் தலைவர் ஏ. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.சின்னுசாமி. ஒன்றிய தலைவர் பி.செல்வராஜ். மாவட்ட பொருளாளர் ஏ.சண்முகம் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வீ.பி. சபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.