tamilnadu

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை உடனே திறக்கக் கோரி ஜன.28 ஆட்சியரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜன.20- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யை திறந்து செயல்படுத்திடக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில்  கரும்பு விவசாயிகள் 14.12.2021 முதல் கடந்த நாற்பது நாட்களாக அலங்காநல்லூரில் ஆலை முன்பு தொடர் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கிராம  மக்கள். ஜனநாயக இயக்கங்கள் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங் களில் பங்கேற்று வருகின்றனர். அலங்கா நல்லூர் வணிகர்கள் ஒரு நாள் கடை அடைப்பு நடத்தி ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில தொழில்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், நிதி அமைச்சர், கூட்டுறவு துறை அமைச்சர் களை நேரில் சந்தித்து தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்திட கோரி மனு அளிக்கப்பட்டது. 07.01.2022 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், நாகை.மாலி எம்.எல்.ஏ., எம். சின்னதுரை எம்.எல்.ஏ., டி.ரவீந்திரன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சரையும், தொழில்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யை திறந்திடக் கோரி மனு கொடுத்து வலியுறுத்தினர்.

மனுவை பெற்றுக் கொண்டு முதல்வருடன் பேசி முடிவெடுப்பதாக அமைச்சர்கள் கூறினர். நாகைமாலி எம்.எல்.ஏ., கரும்பு விவசாயி களுக்காக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து செயல்படுத்திடக்கோரி வேளாண்துறை அமைச்சருடன் பல முறை பேசினார். 24.12.2021 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை யில் தலைமை செயலகத்தில் தமிழக முத லமைச்சரை நேரில் சந்தித்து தேசிய கூட்டு றவு சர்க்கரை ஆலையை திறந்து செயல்படுத்திட வேண்டும். தென் மாவட்டங் களில் உள்ள ஒரே தேசிய கூட்டுறவு சர்க்கரை  ஆலையை பாதுகாத்திட கோரி மனு கொடுத்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் , மாநில முதலமைச்சர், நிதி அமைச்சர் தியாகராஜன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரை நேரில் சந்தித்து அலங்கா நல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யை திறந்து செயல்படுத்திடக் கோரி வலி யுறுத்தி பேசினார். இவ்வளவு முயற்சிகளுக்கு பிறகும்  ஆலையை திறப்பதற்கான உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது, வன்மையான கண்டனத்திற்கு உரியது.  கரும்பு விவசாயிகளின் தொடர்ச்சி யான போராட்டத்தை அரசு அலட்சியப் படுத்துவது, சரியல்ல என்பதை சுட்டிக்காட்டு கிறோம். தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்தும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறப்பதற்கான உத்தரவை வெளியிட வலியுறுத்தியும், ஜனவரி 28 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மா னிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயி களுக்கு ஆதரவாகவும், கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாதுகாக்கவும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.