மணிப்பூர் அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 25) சென்னையில் அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், சம்மேளன அகில இந்திய தலைவர் நேபாள் தேவ் பட்டாச்சார்யா, செயல் தலைவர் கே.கே.திவாகரன், பொதுச் செயலாளர் ஆர்.லட்சுமய்யா, பொருளாளர் அரிகிருஷ்ணன், சம்மேளன மாநில பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் வி.குப்புசாமி, அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.