வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜூன் 4 - திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் வாய்க்கால், கிளி வாய்க்கால் இருபுற கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூர்வாரி இரு கரைகளிலும் போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் சாலை அமைக்க வேண்டும். பாப்பாகுறிச்சி, எல்லக்குடி, மஞ்சத் திடல் பகுதியில் உள்ள சுடுகாடுகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றி சுடுகாட்டை சீரமைக்க வேண்டும். எல்லக்குடி, பாப்பாகுறிச்சி கரைகளில் உள்ள ஆபத்தான மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று காட்டூர் கடைவீதி யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி செய லாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டியன், மாவட்டச் செயலாளர் நா.கார்த்திகேயன், மாவட்டப் பொரு ளாளர் தனபால், சிபிஎம் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.