வந்தவாசியில் பழங்குடியினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை, மே 29- வந்தவாசி தாலுகாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வருவாய் தீர்வாயத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வந்தவாசி தாலுகாவில் உள்ள கீழ்சாத்த மங்கலம் (சத்யா நகர்), தெள்ளூர், ஆவண வாடி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பழங்குடி சமூக குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா, விலையில்லா கறவை மாடு, பழங்குடியினர் நலவாரிய அட்டை ஆகியவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வந்தவாசி வட்ட துணை ஒருங்கி ணைப்பாளர் சுகுமார் தலைமையில் பேரணியாக வந்து ஜாமபந்தி (வருவாய் தீர்வாயம்) அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஜாமபந்தி அலுவலர், கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் அப்துல்காதர்