திண்டுக்கல், டிச.12- இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. இலவச வீட்டுமனைப்பட்டா, நூறு நாள் வேலை திட்டம், சுடுகாட்டு பாதை, தார்ச்சாலை, சிமிண்ட் சாலை வசதி, விளை யாட்டு மைதானம், நூலகம், மருத்துவ மனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவி லியர்களை நியமிக்க வேண்டும், உள்ளாட்சிகளில் குடிநீர் வசதி, தெரு விளக்கு, கழிப்பறை, கழிவுநீரோடை வசதி கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியம், நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, சாணார்பட்டி ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் திண்டுக்கல் ஒன்றியப் பகுதி களில் 11 இடங்களிலும், பழனியில் 6 இடங் களிலும், பழனி ஒன்றியத்தில் 21 இடங்களி லும், குஜிலியம்பாறையில் 22 இடங்களி லும், சாணார்பட்டியில் 13 இடங்களிலும், தொப்பம்பட்டியில் 12 இடங்களிலும், வேடசந்தூரில் 9 இடங்களிலும், ஆத்தூரில் 3 இடங்களிலும், வத்தலகுண்டுவில் ஒரு இடத்திலும், ரெட்டியார்சத்திரத்தில் 17 இடங்களிலும், நிலக்கோட்டையில் 3 இடங்களிலும், நத்தத்தில் 2 இடங்களிலும், கொடைக்கானலில் ஒரு இடத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதே போல் ஏராளமான இடங்களில் கையெழுத்து இயக்கங்கள், தர்ணா போராட்டங்களும் நடைபெற்றன.