தூத்துக்குடி , பிப்.27 கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத் திற்குள் பயணிகளை இறக்கிவிட நடவ டிக்கை எடுக்க கோரி சிபிஎம் கோவில்பட்டி ஒன்றியக்குழு சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒரு முக்கியமான தொழில் நகராமாகும். இப்பகுதியில் இரண்டு பேருந்து நிலை யங்கள் உள்ளன. இதில் கூடுதல் பேருந்து நிலையத்தில் தினசரி பல்லாயிரக்கனக்கான பொதுமக்கள் கோவில்பட்டிக்கும், கோவில் பட்டியில் இருந்து தங்களது பணிகளுக் காக வெளியூருக்கும் செல்வார்கள். கோவில் பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திற்கு வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பயணி களை ஏற்றி, இறக்கி செல்வதால் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு காயங்க ளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து நடை பெறுகிறது. காவல்துறை சார்பில் பேருந்துகள் கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் உள்ளே சென்று வர நடவடிக்கை எடுக்கபட்டு, அது வும் சில தினங்கள் மட்டுமே நடைபெற்று பின்னர் அரசு அதிகாரிகள் மத்தியில் ஒத்து ழைப்பு இல்லாமல் பாதியில் நின்றுவிட்டது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விடப்பட்ட கிருஷ்ண பிரியா என்பவர் நெடுஞ் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி உயிரிழந்துள்ளார். இது போன்ற உயிரி ழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக வும், உள்ளூரில் இருக்கும் அதிகாரிகள் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவில்பட்டி நகர மக்கள் கோரிக்கையாக உள்ளது.
செல்போன் வெளிச்சத்தில் பயணிக்கும் மக்கள்
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலை யத்திற்குள் பேருந்துகள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்வதால், குறிப்பாக அதிகாலை நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லை என்பதால் செல்போன் வெளிச்சத்தில் மக்கள் பயணிக்கும் நிலைமை உள்ளது. சிபிஎம் மனு இந்நிலையில் விபத்துக்களை தடுக்க அனைத்து பேருந்துகளும் கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாளுக்கு நாள் கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் வெளியூர் சென்று வருவதால் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் கூடுதல் பேருந்து நிலையம் இடையே அரசு பேருந்து இயக்க மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் சிபிஎம் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில் மனு அளித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், கோவில்பட்டி நகர செயலா ளர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேனி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன், விஜயராஜ், சிஐடியு மாவட்டக் குழு மோகன்தாஸ், கண்வீனர் சக்திவேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.