அன்பு சகோதரர் முபாரக் அவர்களே,
வணக்கம். ‘நெல்லை முபாரக்’ என பொதுவாக அறியப்படும் நீங்கள் இப்போது திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிடுவதால் ‘முகமது முபாரக்’ என அழைக்கப்படுகிறீர்கள். தங்களை நெல்லை முபாரக் என்று அழைப்பதா அல்லது முகமது முபாரக் என்று அழைப்பதா எனும் குழப்பத்தால் பொதுவாக நான் சகோதரர் முபாரக் என்று அழைக்கவேவிரும்புகிறேன்.
- ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு வருகிறீர்களே! ஆட்டுக்கறி வைத்திருந்த முகமது அக்லக் எனும் முதியவரை மாட்டுக்கறி வைத்திருந்தார் என அடித்தே கொன்றார்களே - தில்லியில் ஓடும் ரயிலில் முகமது ஜுனைத் எனும் 19 வயது முஸ்லிம் மாணவனை அடித்தே கொன்றார்களே, குஜராத் பில்கிஸ்பானுவின் பச்சிளம் குழந்தையை துள்ளத் துடிக்க தரையில் அடித்தே கொன்றார்களே, அந்த பாசிச பயங்கரவாதிகளை ஓரணியாய் ஒன்று திரண்டு ஓங்கி அடித்து விரட்டு வதற்கு பதிலாக, கடந்த பத்து ஆண்டுகளாக அவர்களோடு கூடிக் குலாவியவர்கள் பக்கம் நின்று கொண்டு யாரை ஓங்கி அடிக்கப் போகிறீர்கள்..?
- முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கள் ஆகிய மூவரே இந்தியாவில் நமக்கு பிரதான எதிரிகள் எனத் தெளிவாக வரையறை செய்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன் வரிசையில் களமாடியவர் நீங்கள்.. ஆனால் தற்போது அச்சட்டத்திற்கு ஆதரவாக கை தூக்கிய வர்களோடு கரம் கோர்த்து நின்று கொண்டு திண்டுக்கல்லில் கம்யூனிஸ்டுகள் மீது வசை பாடுகிறீர்களே! இந்தியாவின் மதச்சார்பின்மையை பாதுகாப்பதில் கம்யூனிஸ்டுகளும் முஸ்லிம்களும் கைகோர்த்து ஓரணியில் நிற்க வேண்டாமா? முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதற்கு கொண்டுவரப்பட்ட சட்டம் சிஏஏ எனத் தெரிந்தும் ‘பாவம்’ செய்தவர்களின் பங்காளியாக ஏன் நீங்கள் மாறிப்போனீர்கள்?
- நான் ஒரு முஸ்லிம் என்பதால் முஸ்லிம் சகோதரர்கள் எனக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கேட்கிறீர்கள். அப்படிக் கேட்பதில் ஒரு நியாயம் இருப்பதாக ஒருவேளை உங்களுக்கு தோன்றலாம். ஆனால் யோசித்துப் பாருங்கள். இத்தகைய உத்தியைத் தானே பாஜகவும் முன்னெடுக்கிறது. இந்துத்துவா எனும் ஆபத்தான கொள்கையோடு, அரசியலைப் புறக்கணித்து மதரீதியாக பெரும்பான்மையினரின் வாக்கு களைப் பெற்று “மதச்சார்பின்மை” எனும் இந்தியா வின் ஆன்மாவை முற்றாக சிதைக்க முயல்கிறது பாஜக. அத்தகைய சக்திகளை தோற்கடிக்க மதங் களைக் கடந்த மக்கள் ஒற்றுமை தானே தற்போதைய தேவை. தேசத்தை விட தேர்தலே முக்கியம் என்பதால் தான் பாஜக மதத்தை அரசியலில் கலக்கிறது. தேர்தலை விட தேசமே முக்கியம் என்பதால் மதச்சார்பின்மையும் மக்கள் ஒற்று மையையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அவர்கள் வழியில் நின்று தேர்தல் அரசியலோடு மதத்தை முடிச்சுப் போட நீங்களும் முனைகிறீர்களே. நேர்மையோடு சொல்லுங்கள். உங்களுக்கு தேசத்தை விடவும் தேர்தல் வெற்றிதானா முக்கியம்?
- குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல. அக்குற்றத் திற்கு உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப் பட வேண்டியவர்களே. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் மதவெறி அரசி யலுக்கு ஆதரவாகவும், மாநில உரிமைகள் பறிபோகிற போது எதிர்த்துப் போரிடாமல் நெடு மரமாய் நின்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தானே.. குற்றம் இழைத்தவர்களை யும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் ஒருசேர தண்டிக்கும் தேர்தல் என்பது மட்டுமல்ல, இது தேசம் காக்கும் போராட்டமும் ஆகும். அந்த புரிதல் தமிழக மக்களுக்கு இருப்பதால்தான் அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள்.
அறத்தின் பால் நாங்கள் நிற்கிறோம்.. நீங்கள் யார் பக்கம்?