tamilnadu

img

அவரா? அவனா? அதுவா? - தேனி சுந்தர்

பக்கத்து தெருவில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு டார்வின் நாள்தோறும் போகிறான்.. அந்த அக்காவை அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..! அந்த அக்கா ஏதோ சில பரிசோதனைகள் செய்து காட்டிருக்காங்க.. அன்றைய வகுப்பு முடிவில் “நீங்களும் ஆளுக்கொரு எக்ஸ்பரிமன்ட் செஞ்சு காட்டணும்னு” சொல்லிருக்காங்க போல.. வீட்டுக்கு வந்ததுல இருந்து கேட்டுக்கே இருந்தான்.. “எதாச்சும் ஒரு எக்ஸ்பரிமண்ட் செய்யணும்ப்பா..!” நானும் “பொறுடா வாரேன்.. பொறுடா வாரேன்..!” என்று சொல்லி நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன்.. அப்புறம் அவனை, ஆளைக் காணோம்..

பத்து நிமிடம் கழிச்சு வந்தான்.. கையில் ஒரு புத்தகம்.. அவனே உட்காந்து அதைப் புரட்டிப் புரட்டி பார்த்தான்.. அது ஆங்கிலத்தில் இருந்தது. முதலில் அதில் போட்டிருந்த படங்களை வைத்து எந்த பரிசோதனை செய்யலாம் என அவனே தேர்வு செய்து, கொஞ்சம் முயற்சி செய்து வாசித்தும் பார்த்தான்.. ஓரிரு வரிகள் தான் வாசித்திருப்பான்.. இடையிடையே அப்டின்னா என்னாப்பா அர்த்தம் கேட்டுக் கொள்வான்.. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க உள்ளூர எனக்குக் கொண்டாட்டம்.. அவனுடைய முயற்சிகள் எனக்கு அப்படியொரு மகிழ்ச்சியை அளித்தன.

ழுகிறது. தொடர்ந்து தேடல் பிறக்கிறது. உடன் இருக்கும் என்னிடம் முதலில் கேட்கிறான். வேலைக்கு ஆகவில்லை. வேறெங்கு உதவி கிடைக்கும்.. புத்தகம்..!

ஆக, புத்தகத்தில் ஏதோ விசயம் இருக்கிறது என அவன் உணர்ந்து கொண்டிருக்கிறான். அமைதியாக இருக்கும் அந்தப் புத்தகத்தை எடுத்து தன் மடியில் கிடத்தினால் அது தன்னோடு பேசும் என்று புரிந்து கொண்டிருக்கிறான். 

அலமாரியில் தேடி எடுக்கிறான். எதையோ தேடி எதையோ எடுத்து வரவில்லை. இலக்குடன் தேடி தேவையானதை எடுத்து வந்தான். Do & See என்கிற புத்தகம். வைத்தண்ணா என்பவர் எழுதிய அந்நூல்  ஆங்கிலத்தில் இருக்கிறது. இருந்தாலும் தயங்கவில்லை. தேடலை அடைய போராடித்தான் ஆக வேண்டும் என்று ஆங்கிலத்தையும் சந்திக்க துணிந்தான்.
இருந்தாலும் இதுக்கு மேலயும் அவனை சோதிக்க கூடாது என்று நானும் அவனுடன் சேர்ந்து கொண்டேன்..

அவனுடைய தேர்வுகள் எல்லாம் கொஞ்சம் சிக்கலானதாக இருந்தன. அப்புறம் சில வரையறைகள் உருவாக்கிக் கொண்டோம். முதலில் பெரியவர்கள் உதவியின்றி செய்ய முடிந்த , கூர்மையான பொருட்கள் தேவைப்படாத, நெருப்பு பயன்பாடு இல்லாத, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யக் கூடிய பரிசோதனைகளில் சிலவற்றை செய்து பார்ப்பது என முடிவு செய்தோம்.. சிலவற்றை செய்தாலும் கூட அதில் ஒரு ஆச்சரியம், வியப்பு, திருப்தி இல்லை அவனுக்கு..! ஒன்றிரண்டு

அவனுக்கு பெரும் சந்தோசத்தை அளித்தன. அவற்றை மட்டும் செய்து காட்டுவது என முடிவு செய்து கொண்டான். செய்து பார்த்தான். சரியா வரல.. மீண்டும்.. மீண்டும்.. ம்ம்.. பிடிபட்டது உத்தி..!

உடனே கிளம்பிட்டான்.. புகழ், இப்ப பாக்குறியா, அண்ணன் ஒரு மேஜிக் செய்வேன்..! ம்மா.. இப்ப பாக்குறியா.. நான் ஒரு மேஜிக் செய்வேன்..! பொறுங்க, கவினு, கிஷோர், லத்திகா கிட்ட காட்டிட்டு வாரேன்..!

இந்த மேஜிக் நிகழ காரணம் யார்..? இல்லம் தேடிக் கல்வி மையத்தை நடத்தும் அந்த அக்காவா..? இல்லை, டார்வினா..? அந்தப் புத்தகமா?
பேசாமல் இருந்தால் எப்படி? ஏதாவது பதில் சொல்லுங்க..!