மயிலாடுதுறை, மார்ச் 30- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் போதைக்கு எதிராக நடைபெற்றுவரும் கையெழுத்து இயக்கத்திற்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமையில் புதனன்று தருமபுரம் ஆதீனம் மடத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன், மாவட்டத் தலைவர் ஐயப்பன், மயிலாடுதுறை வட்டச் செயலா ளர் குமரேசன், வட்டத்தலைவர் ஜெகதீஸ் வரன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வ.பழனிவேலு, தரும புரம் ஆதீனம் கலைக்கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது ஆதீனம் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘போதையினால் ஏற்படும் தீமைகளை திருவள்ளுவர், அருணகிரிநாதர் உள்ளிட்ட நமது முன்னோர்கள் முழுமை யாக விளக்கியுள்ளனர். மணிமேகலை, 11-ஆம் திருமுறை ஆகிய நூல்களிலும் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் விளக்கப்பட்டுள்ளன. இன்றைய இளைய சமுதாயத்தினர் மதுப்பழக்கத்து க்கு மட்டும் உள்ளாகி இருந்தால் அவர் களை மீட்டெடுத்து விடலாம். ஆனால் அவர்கள் உண்ணும் உணவி லிருந்து போதை மிட்டாய், போதை ஊசி போன்ற பயங்கர போதை பழக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அனைவரும் போதைக்கு எதிராக உறுதி ஏற்க வேண்டும்’’ என்றார்.