tamilnadu

img

ரூ.150 கோடியில் பால் பொருட்கள் ஆலை: அமைச்சர் சா.மு. நாசர் தகவல்

சென்னை,ஏப்.13- வெளிநாடுகளுக்கு இதுவரை ரூ.355.30 லட்சம் மதிப்பிலான 7,15,476  லிட்டர் பால் மற்றும் ரூ.115.39 லட்சம்  மதிப்பிலான நெய், ரூ.0.99 லட்சம்  மதிப்பிலான 1,107 லிட்டர் நறுமணப் பாலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். சட்டப் பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடை பெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் நாசர் பதில் அளித்து பேசுகையில்,“ஆவின் பால் தரத்தின் மதிப்பு கூட்டவும், பால்  மற்றும் பால் பொருட்களின் விற்பனையை  அதிகரிவுக்கம, ஆவின் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும்  உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளது”என்றார். சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் மற்றும் துபாய் போன்ற அயல் நாடுகளுக்கு ஆவின்  பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறது.  

இதர வெளிநாடுகளுக்கும் பால் பொருட் களை ஏற்றுமதி செய்ய ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை வெளிநாடுகளுக்கு ரூ.355.30 லட்சம்  மதிப்பிலான 7,15,476 லிட்டர் பால் மற்றும்  ரூ.115.39 லட்சம் மதிப்பிலான நெய் ஏற்றுமதி  செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.0.99 லட்சம்  மதிப்பிலான 1,107 லிட்டர் நறுமணப் பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆவின் பொருட்களை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விற்பனை செய்வதற்கான மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன  உத்தரவும் அபுதாபி, ஷார்ஜா, அஜ்மன், ஓமன், கத்தார், கனடா மற்றும்  அமெரிக்கா (கலிபோர்னியா) ஆகிய வெளிநாடுகளில் ஆவின் பொருட்களை விற்பனை  செய்வதற்கு வணிக ஏற்றுமதியாளர்க ளுக்கான வணிக ஒப்பந்த ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

திருச்சி, அரியலூர், கரூர், நாகைப்பட்டி னம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாத புரம், சிவகங்கை, தஞ்சாவூர்,திருவாரூர், திண்டுக்கல்,நாமக்கல் ஆகிய மாவட்டங்க ளில் நாள் ஒன்றுக்கு 72 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகுகிறது. எனவே, பால்  உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில்  முழுச்சத்து பால் பவுடர், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர்,டெய்ரி ஒய்ட்னர் மற்றும் வெண்ணை தயாரிக்கும் வசதிகளு டன் ரூ.150 கோடி செலவில் புதிதாக ஆலை  நிறுவப்படும் உள்ளிட்ட 32 புதிய அறிவிப்பு களையும் வெளியிட்டார்.