tamilnadu

img

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  தினக்கூலித் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சிதம்பரம், ஜூலை 1- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழ கத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தினக்கூலித் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனை யறிந்த அனைத்து தினக்கூலித் தொழி லாளர்களும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) பல்கலைக்கழக துணைவேந்தர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கே.ஏ. பாண்டியன், காட்டுமன்னார் கோயில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு உள்ளிட்டோர் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தினக்கூலித் தொழிலாளர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் தொழி லாளர்களை பணிக்குச் செல்லலாம் என்று தெரிவித்தது. மேலும், கடந்த 20 ஆண்டு களாக ஒரு நாளைக்கு ரூ.40 கூலியில் தொடங்கி தற்போது ரூ.400 வீதம் தினக்கூலி பெறும் இந்தத் தொழிலாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு கூறுகையில், “ஒரு வார கால அவகாசத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரைச் சந்தித்து முறையிடுவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள தாக தெரிவித்துள்ளார்.