சர்வதேச போதை எதிர்ப்பு நாள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த தோழர்கள் கடலூர் குமார் - ஆனந்தன் நினைவு நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். முகாமை வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் சி.பாலசந்திர போஸ் துவக்கி வைத்தார். இதில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.மணிகண்டன், வாலிபர் சங்க ரத்ததான கழக பொறுப்பாளர் எம்.விவேகானந்தன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் அர்ஜுன், ஒன்றிய தலைவர் சரவணன், ஒன்றிய பொருளாளர் பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.