tamilnadu

img

அலெய்டா குவேராவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

சென்னை, ஜன. 17 - கியூபப் புரட்சியின் நாயகன் சேகுவேரா புதல்வி டாக்டர். அலெய்டா குவேரா செவ்வாயன்று (ஜன.17) சென்னை வந்தார். அவ ருக்கு தமிழக மக்களின் சார்பில் விமான நிலையத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றுக் கணக்கான தோழர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க திருவனந்த புரம் வந்த அவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் கியூப ஒருமைப்பாட்டுக் குழுவின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் திரு வனந்தபுரத்தில் இருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, தனது மகள்  பேரா. எஸ்டெஃபானி குவேரா ஆகியோ ருடன் டாக்டர் அலெய்டா செவ்வா யன்று (ஜன.17)  காலை சென்னை  விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை விமான நிலைய வாயி லில் நின்று விண்ணதிரும் முழக்கங் களுக்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊழியர்களும் குழந்தைகளும் வரவேற்றனர். அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மதிமுக துணைப்பொதுச் செய லாளர் மல்லை சத்யா, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன் (வட சென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், பா.ஜான்சிராணி, எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன் னாடை போர்த்தியும் வரவேற்றனர். சேகுவேரா புகைப்படங்கள் அடங்கிய நீண்ட பதாகையை ஏந்தியவாறு ஏராளமான வாலி பர்களும் மாணவர்களும் புரட்சித் தளபதியின் மகளை வரவேற்றனர். 64 ஆண்டுகளுக்குப் பிறகு  1959-ஆம் ஆண்டு தோழர் சே  குவேரா இந்தியாவுக்கு வருகை  தந்தார். அப்போது பிரதமர் ஜவ ஹர்லால் நேரு தலைமையிலான ஒன்றிய அரசின் சார்பில் அவ ருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது குடும்பத் தை சேர்ந்த ஒருவர் இந்தியா  வருவது இதுவே முதல்முறை யாகும்.

இன்று மாபெரும்  வரவேற்பு நிகழ்ச்சி

சென்னை வந்துள்ள  டாக்டர்  அலெய்டா குவேரா,  டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோ ரை வரவேற்கும் வகையிலும், சோசலிச கியூபாவுக்கு தமிழக மக்க ளின் பேராதரவை தெரிவிக்கும் வகையிலும் புதனன்று (ஜன. 18) மாலை 4.30 மணிக்கு சென்னை பிராட்வேயில் உள்ள  ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கு கிறார். ஒருமைப்பாட்டுக் குழு  கன்வீனர் சசிகுமார் வரவேற்கிறார். விருந்தினர்களை அறிமுகப்படுத்தி ஒருமைப்பாட்டுக் குழு தலைவர், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி பேசு கிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., சிறப்புரையாற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலை வர் ஏ.கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,  மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் எம்.எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மதிமுக தலைமை கழக  செயலாளர் துரை வைகோ, சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் வாழ்த்திப்பேசுகின்றனர்.

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்,  ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் ஐ.ஆறுமுக நயினார் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக் கின்றனர். சென்னை மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன், ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா ஆகியோர் முன்னிலை வகிக்கின்ற னர். அலெய்டா குவேரா, எஸ்டெஃ பானி குவேரா ஆகியோர் ஏற்புரை  வழங்குகின்றனர். முன்னதாக தமிழகத்தின் கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் அலெய்டா குவேரா, எஸ்டெஃ பானி குவேரா ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.