தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் மிகக் குறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, ஜூன் 13 - தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் மிகவும் குறைவு என்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகளை சுட்டிக்காட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேர்காணல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாக பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரச்சாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டிஜிபி யின் நேர்காணலை பகிர்ந்துள்ளார். குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பதாக” முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், போக்சோ குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல் காவல் நிலையத்தில் நம்பிக்கை யோடு புகார் அளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக வும் குறிப்பிட்டுள்ளார். அச்சமின்றி புகாரளித்தால்தான் குற்றவாளியை முதல் குற்றத்தின் போதே கைது செய்து தண்டனை பெற்றுத்தர முடியும் என்றும், இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங் களில் சகிப்புத்தன்மை இன்றி விரைவான விசாரணை, அதிக பட்ச தண்டனை, முன்விடுதலை இல்லை என்பதே தமிழக அரசின் கொள்கை என்று வலியுறுத்தியுள்ளார்.