திருப்பூர், அக்.27 - போதை கலாச்சாரத்திற்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா குழு சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப் பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு ஞாயிறன்று பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய மாணவர் சங்கத்தின் பல்லடம் தாலுகா குழு சார்பில், போதை கலாச்சாரத்திற்கு எதிராக 2 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி கடந்த அக்.20 அன்று துவங்கியது. காளிலம்பட்டி பிரிவில் உள்ள மைதானத்தில் இப்போட் டிகள் நடைபெற்றன. தொடர்ந்து லீக் சுற்றுகள் முடிவடைந்து ஞாயிறன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. பல்லடம் ஜீரோஸ் மற்றும் ராசா கவுண்டம்பாளையம் சாய் நகர் எஸ்.என்.சி அணிகள் இடையில் இப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசு பெற்ற ஜீரோஸ் அணிக்கு வெற்றிக் கோப்பையை இந்திய மாண வர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத்தலைவர் செ.முத்துக்கண்ணன் வழங்கினார். முதல் பரிசுக்கான தொகையை மாணவர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார் வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.என்.சி. அணிக்கு, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செய லாளர் வை.பழனிச்சாமி கோப்பையை வழங்கினார். அவர்களுக்கான பரிசுத் தொகையை பல்லடம் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், விமல்ராஜ், சந்துரு ஆகியோர் வழங்கினர். தொடர் நாயகன் விருதை எஸ்.என்.சி. அணி வீரர் ராஜ் பெற்றுக் கொண்டார். இந்திய ஜனநாயக வாலி பர் சங்க பல்லடம் ஒன்றிய நிர்வாகிகள் தினகரன், சுதாகர், தியாகராஜ் ஆகி யோர் இப்பரிசை வழங்கினர். மாணவர் சங்கத்தின் இம்முயற்சி பொதுமக்களி டையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.