tamilnadu

img

தோழர் வி.என். ராகவன் காலமானார்: சென்னையில் இன்று உடல் தகனம்

சென்னை, ஜூலை 19- தோழர் வி.என். ஆர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் வி.என்.ராகவன் சென்னையில் திங்களன்று (ஜூலை 18) காலமானார். அவருக்கு வயது 92. கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின் பேரில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பலனின்றி திங்களன்று இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார்.  அவருக்கு வனஜா என்ற மனைவியும், பாமா என்ற மகளும்  பாலாஜி, கிரிதரன், என இரு மகன்களும் உள்ளனர். அஞ்சல் ஊழியர்கள் (பி 3) சங்கத்தில்  தோழர் ஜி.நர சிம்மன் தலைவராக இருந்த போது தோழர் வி.என்.ஆர். செயலாளராக இருந்தவர். தபால் ஊழியர் சங்கத்தின் தன்னிகரற்ற தலைவர் மறைந்த தோழர் சி.எஸ்.பி  என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சி.எஸ்.பஞ்சாபகேசனுடன் இணைந்து சமகாலத்தில் செயல்பட்டவர். அகில இந்திய அளவில்  புகழ்பெற்ற அஞ்சல்  ஊழி யர் சங்கத் தலைவராகத் இருந்து மறைந்த  தோழர்  கே.ஜி. போஸ் தலைவராக இருந்த அணியில் செயல் பட்டவர்.  1960,1968,1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர். இதற்காக தோழர் வி.என்.ஆர்  நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு காட்பாடியில்  இருந்து அணைக்கட்டுக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.

தீக்கதிருக்கு பங்களிப்பு

தபால் துறையிலிருந்து ஓய்வுபெற்றவுடன் தீக்கதிர் சென்னைப் பதிப்பு துவங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம்  ஆண்டு வரை சுமார் 9  ஆண்டு காலம் உதவி  ஆசிரியராக பணியாற்றி னார். சிறந்த மொழி பெயர்ப்பாளர். பிரபல எழுத் தாளர்கள் டொமினிக் லாபி யர் மற்றும் லாரி காலின்ஸ்  ஆகியோர் எழுதிய உலகப்புகழ் பெற்ற “ஃபீரிடம் அட் மிட்னைட்’’  என்ற நூலை மயிலை  பாலுவுடன் இணைந்து தமிழில்  (நள்ளிரவில் சுதந்திரம்) மொழிபெயர்த் தவர். அலைகள் வெளி யீட்டகம் வெளியிட்ட ரிக் வேதம் குறித்த நூல் ஒன்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர். பல கட்டுரைகளையும் தோழர் ராகவன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிரு தம் ஆகிய 3 மொழிகளில் புலமை பெற்றவர்.   வயது முதிர்வு காரண மாக வீட்டில் ஓய்வில் இருந்த போதிலும் அரசியல், இலக்கி யம் குறித்து தோழர்களுடன் தொலைப்பேசியில் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 இன்று இறுதி நிகழ்ச்சி

சோசலிச சித்தாந்தத்தை வலுவாகப் பின்பற்றியவர், சமூக மாற்றத்திற்காக உழைத்தவர். மறைந்த மூத்த தோழர் வி.என். ராகவன் ஒரு சிறந்த கம்யூ னிஸ்ட் ஆகத் தம்மை வழி  நடத்திக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர். சாதி மதச் சடங்குகள் -  இறை நம்பிக்கை அற்ற விஞ்ஞான நாத்திகர், இயக்க வியல் பொருள் முதல் வாதம் ஆழக் கற்றிருந்தவர். எனவே அவருடைய இறுதி நிகழ்ச்சியை, கட்சி வழிகாட்டுதல் படி நிறை வேற்றுவோம் என்று அவருடைய புதல்வர் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (ஜூலை 20)  நண்பகல் 12 மணிக்கு  நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள மயானத்தில் தோழர் வி.என். ஆர் உடலுக்கு கொரோனா வழிகாட்டுதல் படி இறுதி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தபால் மற்றும் தீக்கதிர்  ஊழியர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று  கட்சியின் மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர்  ஜி. செல்வா கேட்டுக்கொண் டுள்ளார்.