tamilnadu

330 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்: அமைச்சர் வழங்கினார்

மதுரை, மே. 30- மதுரை  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கொரோனா சிறப்பு வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் 330 மகளிர் சுயஉதவிக் குழுக்க ளுக்கு ரூபாய் 2,00,80,000 கடன் தொகையை  கூட்டுற வுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கி னார். நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் டி. ஜி. வினய்,  மதுரை மாநகராட்சி ஆணையாளர்  ச. விசாகன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.