tamilnadu

சென்னையில் தமிழ் கல்வெட்டுகள் அலுவலகம்!

சென்னை,ஜன.8-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் கல்வெட்டுகளின் நகல்களை யும் (மைப்படிகள்), அதோடு தொடர் புடைய தமிழ் ஆவணங்கள் ஆகிய வற்றையும் பாதுகாக்க தற்போது சென்னையில் உள்ள இந்திய தொல்லி யல் துறையின் தென்பகுதி துணை கண் காணிப்பாளர் அலுவலகம் “தமிழ் கல்வெட்டுகளின் துணை கண்காணிப் பாளர் அலுவலகம்” என மாற்றப்படுவ தாக புதுதில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலு வலகத்தின் துணை இயக்குநர் வெளி யிட்ட உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது. தமிழ் கல்வெட்டுக்கள், ஓலைச்சுவ டிகள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் அனைத்தும் மைசூர் மத்திய தொல்லி யல்துறை மண்டல அலுவலகத்தில் பரா மரிப்பின்றியும், படியெடுத்து பாது காக்கப்படாமலும் இருந்ததால், தமிழக ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள்  பயன் படுத்த முடியாமல் இருந்தது.

இதனை பாதுகாத்து டிஜிட்டல்மயமாக்க வேண்டு மென்று   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட தமிழறிஞர்கள், பத்திரிகையா ளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சென்னை உயர்நீதிமன்றமும் தமிழ் கல் வெட்டுக்களை பாதுகாத்து ஆவணப் படுத்த வேண்டுமென தகுந்த உத்த ரவை ஏற்கனவே பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  தமிழ் கல்வெட்டுகளின் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என மாற்றப்படுவதால் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதற்கு எளி தில் சான்றுகள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும். தனியாக தமிழ் அலுவல கம் உருவாக்கியுள்ளதால் தனியாக கல் வெட்டு பணிகள் புதிதாக உருவாக்கப் படும். தமிழர் தங்கள் சான்றுகள் மீது உண்மையான பற்றுதல் கொண்டு செயல்படுவார்கள். தமிழர் கையில் தமிழ் சான்றுகள் இருப்பதால் உண்மை வரலாறுகள் உறுதிப்படுத்த வழிவகுக் கும். அனைத்தையும் நல்ல நிலையில் செயல்படுத்த முடியும். மேலும், தமிழக ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள் மைசூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையும் மாற்றப்பட்டுள்ளது. எனவே, மைசூர் மத்திய தொல்லி யல் துறை அலுவலகத்திலிருந்து தமிழ் கல்வெட்டுகள், படிகள் மற்றும் அதன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தை யும் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு வருவதையும், இப்பிரிவு அலுவலகத்திற்கு தேவையான பணி யாளர்கள் உள்பட அனைத்து வசதி களையும் செய்துகொடுத்து,  தமிழ் கல் வெட்டுக்களின் படிகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு தேவையான நட வடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.