tamilnadu

img

15 நகராட்சி, 51 பேரூராட்சி வார்டுகள்: குமரி மாவட்டத்தில் சிபிஎம் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியில் 9 வார்டு கள், கொல்லங்கோடு, குழித்துறை, பத்ம நாபபுரம், குளச்சல் ஆகிய 4 நகராட்சி களில் 62 வார்டுகள், பேரூராட்சிகளில் 180 வார்டுகள் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 251 இடங்களில் போட்டி யிட்டது. கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூ ராட்சிகளை இணைத்து புதிதாக உரு வாக்கப்பட்டது கொல்லங்கோடு நக ராட்சி. இதில் மொத்தம் உள்ள 33 வார்டு களில் சிபிஎம் சார்பில் 32 பேர் போட்டி யிட்டனர். இதில் ற்றி.ஷீபா, ஒய்.ஜெய சுதா, கே.முகமது பெரோஸ்கான், எஸ்.கலா, ஆர்.லலிதா, எம்.கிறிஸ்டல்பாய், டீ.சிந்து, பி.விஜயமோகன், பரம சிவன், சசியேந்திரன் ஆகிய 10 பேர் வெற்றிபெற்றனர். திமுக 10, காங்கிரஸ் 6, பாஜக 5, அதிமுக 1, சுயேச்சை 1 என இதர கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. குழித்துறை நகராட்சியில் மொத்த வார்டுகள் 21. சிபிஎம் சார்பில் 21 வார்டு களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட னர். அதில் டி.பாலகிருஷ்ணன், விஜய லெட்சுமி, ஜீலியட் மெர்லின் ரூத், ஜமீலா ராணி, சர்தார்ஷா ஆகிய 5 பேர் வெற்றி பெற்றனர். இங்கு திமுக 5, பாஜக 5, காங்கிரஸ் 4, பாமக 1, சுயேச்சை 1 என உறுப்பினர் பலம் உள்ளது.

பேரூராட்சிகள்

கடையாலுமூடு பேரூராட்சி மலைப் பகுதியான கேரள எல்லையை ஒட்டி உள்ளது. இந்த பேரூராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு மிக்க பகுதியாகும். இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் சிபிஎம் 12 வார்டுகளிலும் திமுக 6 வார்டுகளி லும் கூட்டணி அமைத்து போட்டியிட் டன. இதில் சிபிஎம் சார்பில் போட்டி யிட்ட பெபினா மெர்லின், ரெகு, சந்தியா, ஜூலியட், சுமங்கலா, உஷாகுமாரி, ஜாண், எஸ்.ஆர்.சேகர், ஜாண் சைரஸ் ஆகிய 9 பேர் வெற்றி பெற்றனர். திமுக 4, காங்கிரஸ் 4, அதிமுக 1 என  கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அருமனை பேரூராட்சியில் 15 வார்டு கள் உள்ளன. இங்கு சிபிஎம் தலைமை யிலான கூட்டணி 11 இடங்களை கைப் பற்றியுள்ளது. சிபிஎம்8 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை கைப்பற்றி யது. திமுக 3 இடங்களில் போட்டி யிட்டு 1 இடத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 3 இல் போட்டியிட்டு 2 இல்  வெற்றி பெற்றது. தேமுதிக போட்டி யிட்ட ஒரு இடத்தை கைப்பற்றியது. சிபிஎம்மில் நெல்சன், ஜெனிஷா, அனிதா செலின், ஜெயராணி, ஆமோஸ், மேரி ஜெனோபா, லதிகா மேரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் சிபிஎம் வட்டா ரக்குழு உறுப்பினரான நெல்சன், பேரூ ராட்சியில் 10 ஆண்டுகள் தலைவராக இருந்த பாஜகவதின் தேவராஜை தோற் கடித்தார்.

திற்பரப்பு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 11 இல் சிபிஎம் மும், 7 வார்டுகளில் திமுகவும் கூட்டணி யாக போட்டியிட்டன. இதில் சிபிஎம் சார்பில் போட்டியிட்ட ற்றி.கே.கிருஷ்ண வேணி, எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், பி. ஷீஜாசந்திரன், மல்லிகா, சுதா ஆகிய 5 பேர் வெற்றிபெற்றனர். பாஜக 8, காங்கி ரஸ் 4, அதிமுக 1 என வெற்றி பெற்றுள் ளன. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினரான எஸ்சி.ஸ்டாலின்தாஸ் பேரூ ராட்சி தலைவராக முன்பு பொறுப்பு வகித்தவராவார்.

கணவன் இறந்த நிலையில்..

திற்பரப்பு பேரூராட்சியில் போட்டி யிட்ட சிபிஎம் வேட்பாளர் மல்லிகா தனது கணவர் அஜித்துடன் தேர்தல் பணி யாற்றத் தொடங்கினார். வாக்காளர் களை இரண்டு சுற்று சந்தித்த நிலை யில் மாரடைப்பு ஏற்பட்டு அஜித் உயிரி ழந்தார். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் கட்சி ஊழியர்களுடன் இணைந்து அவரது மகன்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். வாக்காளர்கள் மல்லிகாவை கைவிடவில்லை. வெற்றி பெறச் செய்துள்ளனர். பாகோடு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளிலும் சிபிஎம் போட்டி யிட்டது. கட்சியின் வேட்பாளர்கள் எம்.கேதரின்எஸ்தர்டாணி, ஆர்.சுபிதா, ஆர்.ஜெயராஜ், வி.பால்ராஜ், எம்.மரிய தாஸ் ஆகிய 5 பேர் வெற்றி பெற்றனர். இங்கு பாஜக 5, காங்கிரஸ் 4, திமுக 1, தேமுதிக 1, சுயோட்சை 2 என வெற்றி பெற்றுள்ளனர். தமிழக கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை பேரூராட்சியில் மொத் தம் உள்ள வார்டுகள் 15, இதில் சிபிஎம்மின் ஏ.வின்சென்ட், சிபிஎம் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் கள் சுனிதா, விஜயகுமாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இங்கு காங்கிரஸ் 5, பாஜக 4, திமுக 1, அதிமுக 1, எஸ்டிபிஐ 1 என வெற்றி பெற்றுள்ளன.  வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி யில் சிபிஎம் வேட்பாளர் வின்சென்ட் வெற்றி பெற்றார். கோதநல்லர் பேரூ ராட்சியில் ஜே.அமலராஜன், மணவா ளக்குறிச்சி பேரூராட்சியில் சிபிஎம் சார் பில் போட்டியிட்ட டி.பின்னிபோஸ்கோ வெற்றி பெற்றார். வேர்கிளம்பியில் சிபிஎம்மின் சோபிதராஜ், கீழ்குளத்தில் செல்வதாஸ், புதுக்கடையில் ஆர்.லதா, திருவட்டாறு பேரூராட்சியில் ற்றி.கலா, வில்லுக்குறி பேரூராட்சியில் சகாய தினேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.