tamilnadu

img

தோழர் கனய் பானர்ஜிக்கு சிபிஎம் அஞ்சலி

புதுதில்லி, செப்.15- முதுபெரும் தொழிற் சங்கத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழுவின் முன்னாள் உறுப் பினருமான தோழர் கனய் பானர்ஜி காலமானார்.  தோழர் கனய் பானர்ஜி சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். பின்னர் மாண வர் பருவக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் ரயில்வே ஊழியராக இருந்தபோது, ரயில்வே தொழிற்சங்க இயக்கத்தை வளர்த்  தெடுப்பதில் வாழ்நாள் முழுதும் பங்களிப்பி னைச் செய்துள்ளார். இந்தியத் தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு), மத்தியக் குழு உறுப்பினராக இருந்து, தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார். தோழர் கனய்  பானர்ஜி தத்துவ இயலிலும் கலாச்சாரத்துறையிலும் மாபெரும் அறிஞராவார். அவர் மிகவும் எளிய வாழ்க் கையையே மேற்கொண்டிருந் தார். சிபிஎம் அரசியல் தலைமைக் குழு, தோழர் கனய் பானர்ஜியின் குடும்பத் தாருக்குத் தன்ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.      (ந.நி.)