tamilnadu

img

எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை இல்லை

நாமக்கல், டிச.2- நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பயிற்சி முகாம் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் பேசியதாவது:  தமிழக பாஜகவினர் ஆளுநரை சந்தித்து, தமிழக அரசு மீது புகார் கொடுத்துள்ளனர். ஜூலை மாதம் பிரதமர் வந்தபோது பாதுகாப்பு குறைபாடு என்கின்ற னர். பிரதமர் பாதுகாப்பு என்பது முற்றிலும் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்டது. இதுபோன்ற புகார் ஏற்புடையதல்ல.  தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட 20 மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட மசோதா, ஆளுநர் ஒப்புதல் அளித்தால் தான் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாம தம் செய்ததால் அச்சட்டம் காலாவதியாகி விட்டது. இதன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தமிழக ஆளுநர் ஊக்கப் படுத்தியுள்ளார். ஆளுநருக்கு  உரிய வேலையை விட்டுவிட்டு, பாஜக- ஆர்எஸ் எஸ்சின் பணிகளை அவர் செய்யக்கூடாது. இந்த போக்கு கண்டனத்திற்குரியது.

முதல்வர் கவனிக்க வேண்டும்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 80 மாதங்களாக அகவிலைப் படி வழங்காமல் உள்ளது. பலமுறை கோரிக்கை வைத்தும் வழங்கப்படவில்லை. எனவே தொழிலாளர்களுக்கான இந்த படியை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மின்சார கட்டணத்தில் தற்போது பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது. மின் சாரத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை யில் முதல்வர் தலையிட்டு பொதுமக்களு க்கு பாதிப்பில்லா வண்ணம் சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.  அதற்கு தற்போது அரங்கேறிய பெரம் பலூர் சம்பவம் உதாரணம். குற்றவாளிகள் மீது காவல் துறையினர் முறையான நடவ டிக்கை எடுக்கவில்லை. இதில் தொடர்புடை யவர்கள் மீதும், அலட்சியமாக இருந்த அதி காரிகள், காவல் துறையினர் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு, ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டு பெற்றுத் தர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமிக்கு  உரிமை இல்லை

தமிழக அரசு செயல்பாடு சரியில்லை  என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கூறுவதற்கு தார்மீக உரிமை யில்லை. அவரது தலைமையிலான அதிமுக ஆட்சியின் மோசமான நிலை மக்க ளுக்கு தெரியும். கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக அரசு நிதி நெருக்கடியில் விட்டு விட்டு சென்றுவிட்டது. சீர்கேட்டின் உருவம்  தான் அதிமுக அரசு. தற்போது இதனை சமா ளிக்கும் பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி தொகையைக்கூட முழுமையாக தர மறுக்கிறது.  தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, குஜராத் மாநி லத்தில் இலவச திட்டங்களை அள்ளி தெளித்துள்ளது. முரண்பாடான ஒன்று தான் பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் எதிர்கட்சி என்பது எதிரிக் கட்சியாக இருக்கக்கூடாது. மக்கள் குறைக ளை அரசுக்கு சுட்டிக்காட்டி, திட்டங்களை பெற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் அதிமுக பிளவுபட்டு கிடக்கிறது.  தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு எதிராக பலகட்சிகள் திரளும். தமிழகத்தில் திமுகவுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடன்பாடு தொடரும்,  இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ரங்கசாமி, ஒன்றியச் செயலாளர் ஜி.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.