tamilnadu

img

சிபிஎம் மாநில அலுவலக கட்டிட நிதி ரூ.5 லட்சம் வழங்கிய இராமநாதபுரம் மாவட்டக்குழு

இராமநாதபுரம்,நவ.13-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பாக மாநில அலுவலக கட்டிட நிதி வழங்கும் விழா மற்றும் நவம்பர் புரட்சி தின விழா இராமேஸ்வரத்தில் நடை பெற்றது  இந்நிகழ்ச்சிக்கு தாலுகாச் செய லாளர் ஜி.சிவா தலைமை வகித்துப்  பேசினார். மாவட்டச் செயலாளர்  வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கருணாகரன் ஆகி யோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். கலையரசன், ஆர். குருவேல், எம்.முத்துராமு, வி.மயில்வாகனன், இ கண்ணகி மற்றும்  மாவட்டக்குழு, தாலுகாக்குழு உறுப்பி னர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாநில அலுவலக கட்டிட நிதியாக முதல் கட்டமாக ரூ.5 லட்சத்தை  மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரனிடம் தாலுகா செயலாளர் ஜி.சிவா வழங்கினார். பின்னர் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் பேசுகையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் மோடி ஆட்சியில் கடும் விலைவாசி உயர்வு மற்றும் வேலை இழப்பால் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கும்  கோடிக்கணக்கான ஏழை மக்களின் எதிர்கால பயத்திலிருந்து விடுவிக்கும் ஒரே தீர்வாக தொழிலாளிகள், விவசாயி கள் மற்றும் உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட அமைப்பு ரீதியான போராட்டமே உள்ளது. இதை மக்களி டம் எடுத்துச் செல்ல வேண்டும். வேலை  உறுதித் திட்டத்தின் கீழ் நாடு முழு வதும் கிராமப்புற ஏழை எளிய விவசாய  தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சட்ட உரிமை வேலை நாட்கள் மற்றும் சட்டக் கூலியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். இதேபோல் முறைசாரா தொழிலாளர்களுக்கும் தினக்கூலியை அரசுகள் உயர்த்தி வழங்க வேண்டும்  என்று கூறினார்.