tamilnadu

img

எத்தலப்பர் மணிமண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

எத்தலப்பர் மணிமண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உடுமலை, மே 25- திருமூர்த்திமலைப் பகுதியில் கட்டப் பட்டுள்ள எத்தலப்பர் மணி மண்டபத்தை மக் கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்த தளி  பாளையக்காரர் ஏத்தலப்ப நாயக்கருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, மணி மண்டபம்  கட்ட வேண்டும் என்பது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கடந்த காலத்தில்  முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இதையடுத்து தமிழக அரசு, திருமூர்த்தி மலையில் எத்தலப்ப நாயக்கருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டு பணிகள் நிறைவடைந்து, கடந்த வரு டம் திறக்கப்பட்டது. மேலும், உடுமலை நக ராட்சி அலுவலக வளாகாத்தில் அவரது சிலை யும் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், மணி  மண்டபம் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல், கடந்த ஓராண்டு காலமாக பூட்டி வைத்திருக் கும் செயல், சுதந்திர போராட்ட வீரரை அவ மதிக்கும் வகையில் உள்ளது. மேலும், இது திருமூர்த்திமலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபங்களுக்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திருமூர்த்திமலை காண்டூர் கால்வாயின் அருகில் உள்ள மணி மண்ட பத்தை உடனடியாக பொதுமக்கள் நிகழ்ச்சி கள் நடத்துவதற்கு ஏதுவாக, பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும், என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணி மண்டபம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜகோபால் தலைமை வகித் தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அருன்பிரகாஷ், தமிழ் தென்றல் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.