தென்காசி, ஜூன் 13 - அனுமதியில்லா கல்குவாரிகளை தடை செய்திடக் கோரியும் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்திடக்கோரியும் தென்காசியில் செவ்வாயன்று சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தென்காசி மாவட்டத்தில் கடையம், தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன் கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் தகவல் படி அரசு அனுமதி பெற்ற குவாரிகள் 37 உள்ளன. ஆனால் அரசு அனுமதி பெறாமல் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், எம்சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை மீறி செயல்படுகின்றன. அதோடு இந்த நிறுவனங்கள் மூலமாக ஏராளமான சல்லி மற்றும் எம் சாண்ட், சில இடங் களில் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு உட்பட்ட டிப்பர் லாரிகளில் அனுமதி இல்லாமல் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை புளியரை சோதனைச் சாவடியில் இருக்கின்ற அதிகாரிகளும் காவல் துறையினரும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத் திற்கு உரிய முறையில் தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கனிம வளங்கள் சுரண்ட ப்பட்டு வருகின்றன. கல் குவாரி அமைந்துள்ள இடங்களை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் என்பது வெகு வாக குறைந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்தால் மக்கள் குடிநீருக்காக அலையக் கூடிய நிலைமை கல்குவாரிகளால் உருவாகி விடும். ஏற்கெனவே விவசாயம் பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. இதற்குக் காரணம் விவ சாயத்திற்கான நீர் ஆதாரம் இல்லாததுதான். இந்த நிலையில் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் கல் குவாரிகளை தடை செய்யக் கோரியும் மக்களின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் உ.முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
பெ.சண்முகம் பேச்சு
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் உரையாற்றினார். அவர் பேசும் போது, தென்காசி மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் கனிமவள கொள்ளை என்பது தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் கூடுதலாக அரசு அனுமதி யில்லாமல் ஏராளமான கல்குவாரிகள், எம்சாண்ட் நிறுவனங்கள் இரவு பகல் பாராமல் கனிம வளங்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் மக்களை திரும்பி பார்க்க வைக்கிற மாவட்டமாக தென்காசி உள்ளது. இந்த மாவட்டத் தில் தான் குற்றாலம் இருக்கின்றது. இந்திய, உலக அளவில் பல்வேறு மக்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்ட ம்பர் ஆகிய நான்கு மாதங்களில் பெரிய அளவிற்கு வருகை தந்து இயற்கை கொஞ்சும் குற்றால அரு விகளில் குளிப்பதோடு இயற்கையின் அழகை ரசித்து விட்டு செல்வர். ஆனால் மாவட்டத்தில் தற்போது நடைபெறும் கனிம வள கொள்ளையை பார்க்கும் போது இந்நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் இயற்கை அழகை ரசிக்க முடியாது. அருவிகளில் தண்ணீரும் வராது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனுமதி இன்றி இயங்கும் கல்குவாரிகளை தடை செய்வதோடு கனிமவள கொள் ளையை தடுத்து நிறுத்த வேண்டும். தடுத்து நிறுத்தாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கல்குவாரிகள் முன்பாக முற்றுகை யிடும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கம், கணபதி, அயூப்கான், குணசீலன், அசோக்ராஜ், உச்சி மாகாளி மற்றும் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள், தாலுகா நகர கமிட்டி செயலாளர்கள், கிளைச் செய லாளர்கள், பல்வேறு தொழிற்சங்கங் களின் நிர்வாகிகள் பகுதியில் உள்ள பொதுமக்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியரிடம் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.