பத்தாயிரம் குடிசைகள் அமைத்து சிபிஎம் போராட்டம்
தெலுங்கானா ஜக்கலோடியில் மாபெரும் இயக்கம்
புதுதில்லி, ஜுலை 27- நிலத்திற்கான போராட்டத்தில், ஜக்கலோடி மக்கள் வீரத் தெலுங்கா னாவின் புரட்சிகர உணர்வை போற்றி வருகின்றனர். வாரங்கல் அருகே ஜக்கலோடியில் பல்லாயிரக் கணக்கானோர் அரசின் தரிசு நிலத்தை கைப்பற்றி குடிசைகள் கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறை மற்றும் குண்டர்களைப் பயன்படுத்தி அவர்களை வெளி யேற்ற அரசு முயற்சிக்கிறது. இந்த போராட்டத்திற்கு உள்ளூர் சிபிஎம் தலைவர்கள் தலைமை தாங்கு கின்றனர். நிலமற்ற அனைவருக்கும் இரண்டு அறை வீடுகள் என்ற டிஆர்எஸ் அரசின் வாக்குறுதி 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறை வேற்றப்படவில்லை. போதிய நிலம் இல்லை என்று அரசு சொல்கிறது. இதன் மூலம் ஜக்கலோடி மற்றும் அருகில் உள்ள பஸ்தானாசெருவில் இருநூறு ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு தரிசு நிலம் போராட்ட மைய மாக மாறியுள்ளது.
மே 7 ஆம் தேதி, சிபிஎம் தலைமையில், நிலமற்ற மக்கள் இங்கு நூற்றுக்கணக்கான குடிசைகளைக் கட்டினர். தரிசு நிலத்தை சட்டவிரோத மாகப் பயன்படுத்திய நில மாபியாக் களும் மற்றவர்களும் மக்களை வெளி யேற்றுவதற்கான அழுத்தத்தைத் தொடங்கினர். ஜூன் மாத தொடக்கத் தில், காவல்துறையினரும் குண்டர் களும் புல்டோசர்களுடன் வந்து குடி சைகளை இடித்தனர். பெண்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இருப் பினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிர வீரியத்துடன் போராட்டத்தை மீண்டும் தொடங்கியது. நான்கா யிரம் குடிசைகள் அழிக்கப்பட்ட போது, அந்த இடத்தில் சுமார் பத்தா யிரம் குடிசைகள் அமைக்கப்பட்டன. பட்டா உள்ளிட்ட உரிமைகளை பெற்றுக் கொள்வதில் போராட்டக் காரர்கள் உறுதியாக உள்ளனர். போராட்ட மையத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டிஆர்எஸ் அரசு நிலமற்றவர்களின் கண்ணீர் துடைக்க வேண்டும் என்றும், நில மாபியாக் களுடன் துணைநிற்க வேண்டாம் என்றும் யெச்சூரி கேட்டுக்கொண் டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, மாநிலச் செயலர் டி.வீரபத்ரம், மத்தியக் குழு உறுப்பினர் பி.வெங்கட் உள்ளிட்டோர் பேசினர்.