tamilnadu

img

பாஜக, இந்து முன்னணியின் மதவெறி அரசியலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், நவ.26- கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டின் முன்பு குண்டு வெடித்ததாக நாடகம் ஆடிய பாஜக, இந்து முன்னணி சங் பரிவார மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் ஆபத்தான மதவெறி மற்றும் மலிவான அரசியலை கண்டித்தும் மக்கள் ஒற்றுமையை பாது காக்கவும் மத ஒற்றுமையை பாதுகாக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலை மை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், அருளர சன், சிவகுரு, மாவட்டக் குழு உறுப்பினர்கள்  சா.ஜீவபாரதி, நாகராஜன், மாநகரச் செய லாளர் செந்தில்குமார், குடந்தை ஒன்றியச் செயலாளர் ஜேசுதாஸ், மாமன்ற உறுப்பி னர் செல்வம், திக நகரத் தலைவர் நிம்மதி, விசிக மண்டலச் செயலாளர்  விவேகானந் தன், நீலப்புலிகள் இயக்கம்  நிறுவனர் இளங் கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், தரையில் அமர்ந்து மதவெறியை தூண்டும் பாஜக கும்பலை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.