சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேல் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்
புதுதில்லி, ஜூன் 13 - ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேலின் முரட்டுத் தனம்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்கு தல் தொடுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. இஸ்ரேல் மேற் கொண்டு வரும் இராணுவ நட வடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தச் செயல்களின்மூலம் இஸ்ரேல் ஒரு முரட்டு நாடு போல நடந்து கொள்கிறது. இவ்வாறு மேற்கு ஆசிய நாடுகள் மீது, தன் இஷ்டத்திற்கு தாக்குதல்களை நடத்து வதன் மூலம் அது சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை அது நிரூபித்துள்ளது.
தாக்குதல் பின்னணியில் அமெரிக்க ஆதரவு
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் விளைவாக மூத்த அணு விஞ்ஞானிகள், இராணு வத் தளபதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் பல மாதங் களுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கை கள் தெரிவிக்கின்றன. முழு மேற்கு ஆசியப் பகுதியிலும் இஸ்ரேலின் மேலாதிக்கத்தை முன்னிறுத்துவதே இதன் நோக்கமாகத் தெரிகிறது. இவ்வாறான தாக்குதல்கள், மறை முகமாகவோ அல்லது நேரடி யாகவோ, அமெரிக்க ஆதரவு இல்லா மல் சாத்தியமில்லை என்பது தெளி வாகிறது. அமெரிக்க ஆதரவு இல்லா மல், இஸ்ரேலுக்கு இத்தகைய ஆக்கிர மிப்பு இராணுவ நடவடிக்கையை மேற் கொள்ள நம்பிக்கையோ திறனோ இருக்காது.
பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சி
இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதும், ஆனால், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள், அமைதியான நோக்கங்களுக்காக கூட, அணு தொழில்நுட்பத்தை உரு வாக்குவது கூடாது என தடுக்க முயல் கிறது என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. அணுசக்தி பிரச்சனைகள் குறித்து ஈரானுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், இந்த தாக்குதல் நடைபெறுவது, பரந்த பிராந்திய மோதலைத் தூண்டி, மேற்கு ஆசியாவை ஆழமான உறுதியற்ற தன்மையில் ஆழ்த்த வாய்ப்புள்ளது. கடந்த 20 மாதங்களாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக ஓர் இனப் படுகொலைப் போரை நடத்தி வரு கிறது. இப்போது, ஈரான் மீதான இந்தத் தாக்குதலின் மூலம், பிராந்தி யத்தில் தனது ஆதிக்கத்திற்கு ஏற்படக் கூடிய எந்தவொரு சவாலையும் இல்லாமல் செய்ய முயல்கிறது என்பது தெளிவாகிறது.
இஸ்ரேலுக்கு மோடி அரசு துணைபோவது சரியல்ல!
ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சர்வதேச சமூகம், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுக்க தாமதமின்றி தலையிட வேண்டும். இந்தத் தாக்குதலுக்கு உலகளாவிய கண்டனத்துடன் இந்திய அரசும் தனது குரலை இணைக்க வேண்டும். இஸ்ரேல் தனது இராணுவ நட வடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசு தீவிரமாக வலியுறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் வியாழனன்று (ஜூன் 12) பாலஸ்தீனத்திற்கு ஆதர வாக வாக்களிப்பதை இந்தியா தவிர்த்து வந்தது மிகவும் வருந்தத் தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் இஸ்ரேலையும், பிராந்தியத்தில் அதன் தொடர்ச்சியான ஆக்கிர மிப்பையும் மேலும் அதிகரிக்கவே உதவும். ஈரான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளது. அவை மதிக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். பாஜக தலைமையிலான அரசாங்கம் இஸ்ரேலுக்கான அதன் மறைமுக ஆதரவை முடிவுக்குக் கொண்டு வந்து மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் நீதிக்கான தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. (ந.நி.)