இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 6 செவ்வாயன்று சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.