அகர்தலா, மார்ச் 13- நான்கு மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி யைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் திரிபுரா மாநி லத்தில் அக்கட்சியினர் வன் முறை வெறியாட்டம் நடத்தி யுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊழியர் களும் அலுவலகங்களும் பாஜக குண்டர்களின் தாக்கு தலுக்கு இலக்காகின. திரிபுராவில் நடைபெற்று வரும் அரசியல் வன்முறை யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மற்றும் வெகுஜன அமைப்புகளின் பல அலுவலகங்கள் சூறை யாடப்பட்டுள்ளன. சில அலு வலகங்கள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டுள்ளன. வெற்றிக்கொண்டாட்டம் என்ற பெயரில் அம்மாநில ஆளும் பாஜக இத்தகைய வன் முறையைத் தூண்டிவிட்டுள் ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி யுள்ளது. தலைநகர் அகர்தலா வில், திரிபுரா மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் மத்திய அலுவலகம் சூறை யாடப்பட்டதுடன், அந்த அலு வலகத்தில் இருந்த அனை த்து பொருட்களும் நாச மாக்கப்பட்டுள்ளன. ரஞ்சித் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆதரவாள ரான பிஜோய் பிஸ்வாஸின் மளிகைக் கடை இடிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி யின் துணை வட்டார குழு அலுவலகம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர் மின்ஹாஜ் அகமது தாக்கப்பட்டார்.
துர்கா சௌமுஹானி என்ற இடத்தில் கட்சி ஊழியர் அபு பாலின் கடை அடித்து நொறுக்கப்பட்டது. கிரு ஷ்ணாநகரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூர் கமிட்டி உறுப்பினர் கோபால் மாலாக்கரின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள் ளது. தலைநகர் அகர்தலாவில் மட்டுமல்ல; திரிபுரா மாநிலம் முழுவதிலும் இருந்து இது போன்ற தாக்குதல்கள் நடை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் பபித்ராகரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள் ளது; பல கடைகள் சூறை யாடப்பட்டுள்ளன; தீ வைத்து நாசமாக்கப்பட்டன. அகர்தலா நகரின் பகுதி யாக உள்ள ஜிரானியா கைர்பூர், ராணிர் பஜார், மேலகர், ராஜ்நகர், மோகன் பூர், குமார்காட் மற்றும் ஃபாத்திக்ரே ஆகிய இடங் களில் வியாழக்கிழமை இரவு முழுவதும் வன்முறை தொட ர்ந்தது. 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர் கள் தாக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்ட தாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறைக்கு திரிபுரா பாஜக முதல்வர் இது வரை கண்டனம் தெரிவிக்க வில்லை.
இடதுசாரி கட்சி களில் உள்ள சிறுபான்மை மக்களின் வீடுகள் மற்றும் மசூதிகள் உட்பட மொத்தம் 39 இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. பிஷால்கர் என்ற இடத் தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டி அலுவலகம் புல்டோ சரைக் கொண்டு இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் கட்சி ஊழியர்கள் பாஜக குண் டர்களால் தாக்கப்பட்டனர். முஸ்லீம் என்பதால் கட்சி ஊழியர்களான நர்வார் துலால் ஹொசைன், குர்ஷெத் ஆலம் மற்றும் சஜ்ஜத் கான் ஆகி யோர் கடுமையாகத் தாக்கப் பட்டனர். குமார்கட் என்ற இடத்தில் கட்சியின் பகுதிக் குழு அலுவலகம் சூறையாடப் பட்டு, அதில் இருந்த மேஜை நாற்காலிகள் உடைக்கப் பட்டு நாசமாக்கப்பட்டன. மாநிலத்தின் ஜமால்பூர், சோனமுரா மற்றும் சதார் ஆகிய இடங்களிலும் கட்சி அலுவலங்கள் மற்றும் கட்சி ஊழியர்களது சொத்துக்கள் மீது தீ வைப்பு மற்றும் வன் முறைத் தாக்குதல்கள் நடை பெற்றுள்ளதாகத் தகவல் கள் கிடைத்துள்ளன. ஜிதேந்திர சவுத்ரி கடும் கண்டனம் இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக திரிபுரா முதலமைச்சருக்கு கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி எழுதிய பகிரங்கக் கடிதத்தில், “முத லமைச்சராகப் பொறுப் பேற்றபோது ஏற்றுக்கொ ண்ட அரசியலமைப்பு உறுதி மொழியின் படி மக்களின்உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு’’ என்பதை நினைவு படுத்தியுள்ளார். “கடந்த 47 மாதங்களில் நீங்கள் முதலமைச்ச ராக இருந்த போது, ஒரு அரசியல் கட்சி (ஆளும் கட்சி) தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் களில் ஈடுபட்டு வருவது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது” என்றும் அதில் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். முதலமைச்சர் தனக்குள்ள அரசியல் சாசனப் பொறுப்புகளை நிறைவேற்றுவதோடு ஒவ்வொரு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார். திரிபுரா மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த வன்முறைச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரி வித்து கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு அம்மாநிலத்தில் ஒரு நாள் எதிர்ப்பு இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாஜகவின் வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ள கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் சூர்யகாந்த மிஸ்ரா வன்முறையில் ஈடுபட்ட குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திரிபுராவில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அண்டை மாநிலத்தில் நடைபெற்றுள்ள வன்முறைச் செயல்களுக்கு எதிராக மேற்குவங்கத்தில் உள்ள கட்சி கிளைகள் அனைத்தும் எதிர்ப்பு இயக்கம் நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.