மன்னார்குடி, ஏப்.18- தியாகி களப்பால் குப்புவின் 75-ஆம் ஆண்டு நினைவு தின விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடைப் பிடிக்கப்பட்டது. களப்பாலில் உள்ள அவரது உரு வச்சிலைக்கு தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திரு வாரூர் ஒன்றியச் செயலாளர் என். இடும்பையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம், கே.ஜி.ரகுராமன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் காரல் மார்க்ஸ், கோட்டூர் ஒன்றியக் கவுன்சிலர் மாரி யப்பன், ஒன்றியச் செயலாளர் எல். சண்முகவேல், களப்பால் குப்புவின் வாரிசுகள் ஏ.கே.கணேசன், ஏ.கே. பக்கி ரிசாமி, ஏ.கே.சிவஞானம், கோட்டூர் ஒன்றியக் கவுன்சிலர் வி. மாரியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தராஜ், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஆர்.பால்சாமி, பி.ஸ்டா லின், ஆர்.மணிகண்டன், வாலிபர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எம்.சதீஷ், மாதர் சங்க ஒன்றியத் துணைத் தலைவர் பா.ஜான்சி, சி.மாலதி உள் ளிட்ட பலர் மாலையணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். தியாகி களப்பால் குப்பு நினைவு நூலக அறக்கட்டளைக்கு தேவையான புத்தகங்கள் சிலவற்றை அதன் நிறு வனரிடம் ஐ.வி. நாகராஜன் வழங்கினார்.