மயிலாடுதுறை, செப்.17 - தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி மயிலாடுதுறை கேணிக்கரை யில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயி கள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, அகில இந்திய துணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, விவசாயி கள் சங்க மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான டில்லி பாபு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் ஜி.ஸ்டாலின், வாலிபர் சங்க மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் உள் ளிட்டோர் வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.