tamilnadu

img

தியாகி கே.ரத்தினசாமி நினைவிடத்தில் சிபிஎம் தலைவர்கள் வீரவணக்கம்

திருப்பூர், மார்ச் 14 - இடுவாய் தியாகி தோழர் கே.ரத்தினசாமியின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் எழுச்சியோடு கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன்பிருந்து தியாகி ரத்தினசாமி நினைவஞ்சலி ஊர்வலம் தொடங்கி யது. முன்னதாக கட்சி அலுவலகத் தில் செங்கொடியை மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். ஊரின் பிரதான வீதிகள் வழியாக சென்ற  ஊர்வலம் ரத்தினசாமி நினை விடத்தை வந்தடைந்தது. இங்கு கட்சிக் கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ எழுச்சி முழக்கத்திற்கு இடையே ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து ரத்தினசாமி நினைவிடத்தில் அனை வரும் நினைவஞ்சலி செலுத்தினர். இடுவாய் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு கட்சியின் இடு வாய் கிளைச் செயலாளர் கே.கருப்பு சாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் வரவேற்றுப் பேசினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் பா.லட்சுமி, ஒன்றியச் செய லாளர் சி.மூர்த்தி, மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் ஆகி யோர் உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை சிறப்புரை ஆற்றினார்.  எம்.சின்னதுரை பேசுகையில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட கட்சி அணி யினர், தியாகி ரத்தினசாமி துணைவி யார் லோகநாயகி, மகள்கள் கீதாஞ் சலி, நந்தலாலா  மற்றும் உறவினர் கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.