tamilnadu

img

சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டுச் சின்னம் வெளியீடு

கண்ணூர், ஜன.19- கண்ணூரில் ஏப்ரல் 6 முதல் 10 ஆம்  தேதி வரை நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டுக்கான (கட்சி  காங்கிரஸ்) சின்னம் வெளியிடப் பட்டது. வரவேற்புக் குழு அலுவலகத்தில் மத்தியக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜன் சின்னத்தை வெளியிட்டார். நாடக இயக்குநர் இப்ராகிம் வெங்கரா பெற்றுக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் கருதியே கட்சி காங்கிரஸுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஊட கங்கள் பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், சில தவறுகளையும் பரப்பு கின்றன. மக்கள் சார்பாக ஊடகங் கள் முன்வைக்கும் எந்தவொரு ஆலோ சனையையும் ஏற்றுக் கொள்வதாக மத்தி யக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜன் கூறினார். இப்ராகிம் வெங்கரா பேசுகை யில், கட்சிக்கு கலைஞர்கள் மீது எந்த ளவு அன்பு இருக்கிறது என்பதற்கு சின்னம் வெளியீட்டு விழாவுக்கு நாடக  கலைஞரான தனக்கு அழைப்பு விடுத்ததே சாட்சி. மலையாள நாடகத் துறைக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை பார்க்கிறேன் என்றார். மலப்புரத்தைச் சேர்ந்த மனு கல்லிக்காடு என்பவரால் இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி. மாவட்டச் செயலர் எம்.வி.ஜெய ராஜன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி. ஜெயராஜன், டி.வி.ராஜேஷ், ஏ.என். ஷம்சீர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் எம்.பிரகாஷன், வத்சன்  பனோலி, என்.சந்திரன், டி.கே.கோவிந்தன் உள்ளி ட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தில் மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத்தை மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.