சென்னை, ஏப்.18- விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் பணிகளை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. கேரள மாநிலத்திலிருந்து தமி ழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிரு ஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு வரைக்கும் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குழாய் பதிக்க விளை நிலங்களில் கெயில் நிறுவன ஊழியர்கள் அள வீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அனைத்து மாவட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்க மும் விவசாயிகளும் போராடி வருகின்றனர். கெயில் நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட தருமபுரி விவசாயி கணேசன் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் திங்க ளன்று(ஏப்.18) சட்டப்பேரவை யிலும் எதிரொலித்தது. சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டுவரப் பட்டது. அதில் பேசிய மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றகுழுத் தலைவர் நாகை மாலி,“ ஏழை எளிய விவசா யிகளின் விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய்களை பதித்து வருவதால் அந்த விவசாயிகளின் வாழ்வாதார மும் பாதிக்கிறது.
எனவே, மற்ற மாநிலங்களில் தேசிய நெடுஞ் சாலை ஓரமாக கொண்டு செல்வ தைப்போல் நமது மாநிலத்திலும் மாற்றுப்பாதையாக தேசிய நெடு ஞ்சாலை வாழியாக கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். டி.ராமச்சந்திரன்(சிபிஐ), ஜிகே.மணி (பாமக),கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் விவாதத் தில் பேசினர். பின்னர் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்கையில்,“எண்ணை மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக் கும் 8 திட்டங்களில் பல்வேறு நிறு வனங்கள் ஈடுபட்டு வருகிறது. இதில் நான்கு திட்டங்கள் நிறை வடையும் தருவாயில் இருக்கி றது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் எரி வாயு குழாய் பதிக்கும் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு ஒரு விவ சாயி தற்கொலையும் செய்து கொண்டார். பொதுவாக இந்த பகுதியில் நெடுஞ்சாலை வழி யாக ஓரங்களில்தான் குழாய் பதிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். இதுகுறித்து ஒன்றிய அரசின் அதிகாரிகள், நமது தொழில்துறையின் செயலாளர் டிக்கோ, கெயில் நிறுவனம் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தையும் நடத்தி யிருக்கிறோம். இந்த கூட்டத்தி லும் நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். இதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்தான் தருமபுரி துயர சம்பவம் நடந்துவிட்டது. மக்கள் நலன்காக்கும் வகை யில் அவர்களது கருத்துக்களை கேட்டு அவர்களது முழு ஒத்து ழைப்பு பெற்றுதான் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் இந்த அரசு நிறைவேற்றும் என்று உறுதிபட தெரிவித்துக்கொள் வதுடன் விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கும்” என்றார்.