திண்டுக்கல், டிச.9- திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தமி ழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்களா? அல்லது ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்களா? என்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல்லில் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், போக்சோ குற்றவாளிகளுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராடி வருகிறது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்களா? ஆளு நரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. போக்சோ குற்றவாளிக்கு ஜாமீன் கிடைக்கிறது. அமைதி வழியாக போராடுகிற மாதர் சங்கத் தலை வர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. பழனி அடி வாரத்தில் யாருக்கும் அனுமதி வழங்காத இடத்தில் பாத விநாயகர் கோவில் முன்பாக பாஜகவுக்கு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் உழைக்கும் மக்கள் போராட அனுமதி கேட்டால் அனு மதி மறுக்கிறார்கள். எனவே திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் நட வடிக்கையில் மாறுதலை உருவாக்கி செயல்படுத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும். ஜோதிமுருகன் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மாதர் சங்கத் தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். பாஜக வழக்கறிஞர் தெய்வேந்திரனை கைது செய்ய வேண்டும் என்று கூறினார். (ந.நி.)