நாகர்கோவில், டிச.18- குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பெய்த தொடர்-கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள் ளன. உரிய இழப்பீடும் நிவாரணமும் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது: டிச.16,17 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குறிப்பாக நாகர்கோ வில் மாநகராட்சிக்கு உட்பட்ட பாறக்கா மடம், ஊட்டுவாழ்மடம், வசந்த் நகர், மேல் கருப்புகோட்டை, இலுப்படி காலனி, ரயில்வே குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக் குள் புகுந்த வெள்ளம் வெளியேறாமல் தேங்கி கிடக்கிறது. வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும், முற்றிலும் வெள்ளக் காடாக மாறிய பாறக்கல் மடம் மக்கள் வடி வீஸ்வரம் முகாமிலும் தங்கி உள்ளனர்.
வடிகால்களை ஆக்கிரமித்துள்ள மாநக ராட்சியாக மாறியுள்ள (கரியமாணிக்கபுரம் ஊராட்சி) பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்த கைய நீர்வழி ஆக்கிரமிப்புகளில் மாநகரா ட்சியே சாலைகளும் அமைத்துள்ளது. இதன் காரணமாக மழை வெள்ளம் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இவற்றை முழுமையாக நேரடி ஆய்வு செய்து உடனடியாக தேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வும், மாவட்டத்தில் மழையால் இடிந்த வீடு களை கட்டித்தரவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக சற்று இடைவெளிவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயம், ரப்பர், கட்டுமானம், மீன்பிடித்தல், குடிசைத்தொழில்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மீன வர்களும், சிறு, குறு ரப்பர் விவசாயிகளும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களும் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முந்திரி தொழில் நலிவுற்ற நிலையில் கட்டுமானம், முறைசாரா தொழில்களை நம்பியிருக்கும் ஏழை எளிய தொழிலாளர்கள் வருவாயின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியா வசிய தேவைகளுக்கு வட்டிக்கு பணம் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சி அளிக்கும் துயர நிகழ்வுகளும் நடந்து வரு கின்றன. எனவே, பாதிப்புகள் குறித்து முழு மையாக ஆய்வு செய்து அரசின் தலை யீட்டையும், உதவியையும் மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும். கோதையாறு போன்ற மலைப்பாதை களும், கிராம சாலைகள் முதல் தேசிய நெடுஞ் சாலைகள் வரையும் சேதமடைந்திருந்த நிலையில் மழையால் படுமோசமான நிலை க்குச் சென்றுள்ளன. கேரளத்தில் அமைக் கப்படும் சாலைகள் குறிப்பிட்ட காலத்துக் குள் பழுதடைந்தால் ஒப்பந்ததாரரே பொறுப் பாக்கப்படுவதுபோல் குமரி மாவட்டத்திலும் பொறுப்பாக்கப்பட வேண்டும். அனைத்து சாலைகளும் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.